IND Vs ENG T20: 3வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி!

eng vs ind t20 2025 - 2026

இந்தியா இங்கிலாந்து மூன்றாவது டி-20 ஆட்டம்- ராஜ்கோட்-28 ஜனவரி 2025

இங்கிலாந்து அணி வெற்றி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இங்கிலாந்து அணி (20 ஓவர்களில் 171/9, பென் டக்கட் 51, லியம் லிவிங்க்ஸ்டோன் 43, ஜாஸ் பட்லர் 24, வருண் சக்கரவர்த்தி 5/24, ஹார்திக் பாண்ட்யா 2/33, அக்சர் படேல், ரவி பிஷ்னோய் தலா 1 விக்கட்) இந்திய அணியை (20 ஓவர்களில் 145/9, ஹார்திக பாண்ட்யா 40, அபிஷேக ஷர்மா 24, திலக் வர்மா 18, அக்சர் படேல் 15, சூர்யகுமார் யாதவ் 14, ஜேமி ஓவர்டன் 3/24, ப்ரைடன் கார்ஸ் 2/28, ஆர்ச்சர் 2/33, அதில் ரஷீத் 1/15) 26 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற இந்திய அணியின் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து அணியை மட்டையாடப் பணித்தார். இன்றைய ஆட்டத்தில் அர்ஷதீப் சிங்கிற்குப் பதிலாக முகமது ஷமி ஆடினார். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (5 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கட் (28 பந்துகளில் 51 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) அணித்தலைவர் ஜாஸ் பட்லருடன் (22 பந்துகளில் 24 ரன்) இணைந்து விரைவாக ரன் குவித்தார்.

ஒன்பதாவது ஓவரில் ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்க, அதன் பின்னர் விளையாட வந்த ஹாரி ப்ரூக் (8 ரன்) 13ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதற்கு முன்னர் 10ஆவது ஓவரில் பென் டக்கட் அவுட் ஆனார். வருண் சக்ரவர்த்தியின் அபாரமான பந்து வீச்சால் மள, மளவென விக்கட்டுகள் விழுந்தன. ஆயினும் இறுதிக்கட்டத்தில் லிவிங்க்ஸ்டோன், அதில் ரஷீத், மார்க் வுட் ஆகியொரின் ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

          அதன் பின்னர் ஆட வந்த இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (3 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அபிஷேக் ஷர்மா (14 பந்துகளில் 24 ரன்), சூர்யகுமார் யாதவ் (7 பந்துகளில் 14 ரன்), திலக் வர்மா (14 பந்துகளில் 18 ரன்), வாஷிங்க்டன் சுந்தர் (15 பந்துகளில் 6 ரன்) என 13 ஓவர்களுக்குள் இந்திய அணி, 12.1 ஓவரில் 85 ரன்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்தது.

ஹார்திக் பாண்ட்யாவும் (35 பந்துகளில் 40 ரன்), அக்சர் படேல்-உம் (16 பந்துகளில் 15 ரன்) சற்று நிலைத்து ஆடியபோதும் இந்திய அணியின் ரன்ரேட் இங்கிலாந்து அணியின் ரன்ரேட்டைவிட எந்த நிலையிலும் அதிகரிக்கவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 9 விக்கட் இழப்பிற்கு 145 ரன் என்ற அளவிலேயே இருந்தது. இதனால் இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் முதன் முறையாக 26 ரன் கள் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தை வென்றது.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

          ஆட்ட நாயகனாக வருண் சக்ரவர்த்தி அறிவிக்கப்பட்டார். இன்று தோல்வியடைந்த போதும் இந்திய அணி தொடரில் 2-1 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த ஆட்டம் ஜனவரி 31ஆம் தேதி புனேயில் நடைபெறும்.   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories