IPL 2025: பிரமாண்ட வெற்றி பெற்ற கோல்கத்தா அணி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – கொல்கொத்தா vs ஹைதராபாத் – கொல்கொத்தா – 03.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (200/6, வெங்கடேஷ் ஐயர் 60, அங்கிரிஷ் ரகுவன்ஷி 50, அஜிங்க்யா ரஹானே 38, ரிங்கு சிங் 32, ஷமி, கம்மின்ஸ், சீஷன் அன்சாரி, ஹர்ஷல் படேல், மெண்டிஸ் தலா ஒரு விக்கட்) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (16.4 ஓவர்களில் 120, ஹென்றி கிளாசன் 33, மெண்டிஸ் 27, நிதீஷ் குமார் ரெட்டி 19, பாட் கம்மின்ஸ் 14, வைபவ் அரோரா 3/29, வருண் சக்ரவர்த்தி 3/22, ஆண்ட்ரு ரசல் 2/21, ஹர்ஷித் ராணா, சுனில் நரேன் தலா ஒரு விக்கட்) 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே முதலில் மட்டையாட வந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர்கள் க்விண்டன் டி காக் (1 ரன்) மற்றும் சுனில் நரேன் (7 ரன்) இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

அதன் பின்னர் ஆடவந்த அஜிங்க்யா ரஹானே (27 பந்துகளில் 38 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்), அங்கிரிஷ் ரகுவன்ஷி (32 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), வெங்கடேஷ் ஐயர் (29 பந்துகளில் 60 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்), ரிங்கு சிங் (17 பந்துகளில் 32 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய நால்வரும் ஆகியோர் சிறப்பாக ஆடியதால் 20 ஓவர் முடிவில் கொல்கொத்தா அணி 6 விக்கட் இழப்பிற்கு 200 எடுத்தது.  

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

          201 என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய ஹைதராபாத் அணியில்  நான்கு வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர் அடித்தனர். பிறர் ஒற்றை இலக்க ஸ்கோரை தாண்டவில்லை. ட்ராவிஸ் ஹெட் (4 ரன்), அபிஷேக ஷர்மா (2 ரன்), இஷான் கிஷன் (2 ரன்), அனிகேத் வர்மா (6 ரன்), ஹர்ஷல் படேல் (3 ரன்), சிம்ரஜீத் சிங் (பூஜ்யம் ரன்), ஷமி (ஆட்டமிழக்காமல் 2 ரன்) ஆகியோர் ஒற்றை இலக்க ரன் எடுத்தனர்.

இரட்டை இலக்க ரன் எடுத்தவர்கள் நிதீஷ் குமார் ரெட்டி (19 ரன்), கமிந்து மெண்டிஸ் (27 ரன்), ஹென்றி கிளாசன் (33 ரன்), பாட் கம்மின்ஸ் (14 ரன்) ஆகியோர் ஆவர். கொல்கொத்தா அணிக்கு இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய வைபவ் அரோரா 29 ரன் கொடுத்து 3 விக்கட் எடுத்தார். வருண் சக்ரவர்த்தியும் 3 விக்கட் எடுத்தார். சுழல்பந்து வீச்சாளர்கள் மூவரும் விக்கட் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 120 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

          கொல்கொத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர் வைபவ் அரோரா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories