December 5, 2025, 1:00 AM
24.5 C
Chennai

IPL 2025: அதிரடி காட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்த அபிஷேக் சர்மா!

ipl 2025 games - 2025

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் – 12.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ vs குஜராத்

குஜராத் அணியை (180/6, ஷுப்மன் கில் 60, சாய் சுதர்ஷன் 56, ரூத்ர்ஃபோர்ட் 22, ஜாஸ் பட்லர் 16, ஷாருக் கான் ஆட்டமிழக்காமல் 11, ஷர்துல் தாகூர் 2/34, ரவி பிஷ்னோய் 2/36, திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான் தலா ஒரு விக்கட்) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி  (19.3 ஓவர்களில் 186/4, நிக்கோலஸ் பூரன் 61, எய்டன் மர்க்ரம் 58, ஆயுஷ் பதோனி ஆட்டமிழக்காமல் 28, ரிஷப் பந்த் 21, பிரசித் கிருஷ்ணா 2/26, ரஷீத் கான், வாஷிங்க்டன் சுந்தர் தலா ஒரு விக்கட்) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த குஜராத் டைடன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (37 பந்துகளில் 56 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ஷுப்மன் கில் (38 பந்துகளில் 60 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடினர்.

முதலில் ஷுப்மன் கில் 13ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் 14ஆவது ஓவரில் சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 122/2. மீதமிருந்த 6 ஓவர் 5 பந்துகளில் 58 ரன்னுக்கு நான்கு விக்கட்டுகளை குஜராத் அணி இழந்தது மாபெரும் சோகம். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 6 விக்கட் இழப்பிற்கு 180 ரன் எடுத்தது.

          181 என்ற இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய லக்ணோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இன்று மிட்சல் மார்ஷ் ஆடாததால் ரிஷ்ப் பந்த் (18 பந்துகளில் 21 ரன், 4 ஃபோர்) தொடக்க வீரராக இறங்கினார். அவரொடு களமிறங்கிய எய்டன் மர்க்ரம் (31 பந்துகளில் 58 ரன், 9 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடினார்.

ரிஷப் ஆட்டமிழந்த பின்னர் ஆடவந்த நிக்கோலஸ் பூரன் (34 பந்துகளில் 61 ரன், 1 ஃபோர், 7 சிக்சர்) வழக்கம்போல் சிறப்பாக ஆடினார். அதன் பின்னர் ஆயுஷ் பதோனி (20 பந்துகளில் 28 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), டேவிட் மில்லர் (11 பந்துகளில் 7 ரன்), அப்துல் சமத் (3 பந்துகளில் 3 ரன்) ஆகியோர் ஆட்டத்தை வெற்றியோடு முடித்தனர். 19.3 ஓவர்களில் லக்னோ அணி 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

          ஆட்ட நாயகனாக லக்னோ அணியின் மட்டையாளர் எய்டன் மர்க்ரம் அறிவிக்கப்பட்டார்.    

பஞ்சாப் vs ஹைதராபாத்

பஞ்சாப் கிங்க்ஸ் அணியை (245/6, பிரியான்ஷ் ஆர்யா 36, பிரப்சிம்ரன் சிங் 42, ஷ்ரேயாஸ் ஐயர் 82, நேஹல் வதேரா 27, மார்குச் ஸ்டோயினிஸ் ஆட்டமிழக்காமல் 34, ஹர்ஷல் படேல் 4/42, ஈசன் மலிங்கா 2/45) சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி (18.3 ஓவர்களில் 247/2, ட்ராவிஸ் ஹெட் 66, அபிஷேக் ஷர்மா 141, ஹென்றி கிளாசன் ஆட்டமிழக்காமல் 21, இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 9, அர்ஷதீப் சிங், சாஹல் தலா ஒரு விக்கட்) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. தொடக்க் வீரர்கள்  பிரப்சிம்ரன் சிங் (23 பந்துகளில் 42 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்), மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (13 பந்துகளில் 36 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர்.

அதன் பின்னர் ஆட வந்த ஷ்ரேயாஸ் ஐயர் (36 பந்துகளில் 82 ரன், 6 ஃபோர், 6 சிக்சர்), நெஹல் வதேரா (22 பந்துகளில் 27 ரன், 2 ஃரன் சேர்க்கையைத் துரிதப்படுத்தினர். அவருக்குப் பின்னர் ஆட வந்த ஷஷாங்க் சிங் (2 ரன்), கிளன் மேக்ஸ்வெல் (3 ரன்) இருவரும் இன்று சரியாக ஆடவில்லை.

18ஆவது ஓவரில் மேக்ஸ்வெல், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஆட்டமிழக்க மார்கஸ் ஸ்டோயினிஸ் மற்றும் மார்கோ ஜேன்சன் இருவரும் ஆடவந்தனர். 20ஆவது ஓவரில் கடைசி நான்கு பந்துகளையும் ஸ்டோயினிஸ் சிக்சர் அடித்தார்.

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான முகமது ஷமி தனது நான் கு ஓவர்களில் 75 ரன் கொடுத்தார். மிக மோசமான பந்துவீச்சு. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. ளில் 219/6 என உயர்த்தினர்.   

          20 ஓவர்களில் 246 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (37 பந்துகளில் 66 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் அபிஷேக் ஷர்மா (55 பந்துகளில் 141 ரன், 14 ஃபோர், 10 சிக்சர்) இருவரும் தடாலடியான தொடக்கம் தந்தனர்.

ட்ராவிஸ் ஹெட் 13ஆவது ஓவரிலும் அபிஷே ஷர்மா 17ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அபிஷேக் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 222/2. அடுத்த 13 பந்துகளில் வெற்றிக்குத் தேவையான 24 ரன்களை எடுத்து ஹதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. 

          ஆட்ட நாயகனாக ஹைதராபாத் அணியின் மட்டையாளர் அபிஷேக் ஷர்மா அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories