IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 –இரண்டு ஆட்டங்கள்- 19.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

டெல்லி கேபிடல்ஸ் அணியை (203/8, அக்சர் படேல் 39, அஷுதோஷ் ஷர்மா 37, கருண் நாயர் 31, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 31, அபிஷேக் போரல் 18, பிரசித் கிருஷ்ணா 4/41, முகம்மது சிராஜ், அர்ஷத் கான், இஷாந்த் ஷர்மா, சாய் கிஷோர் தலா ஒரு விக்கட்) குஜராத் டைடன்ஸ் அணி (19.2 ஓவர்களில் 204/3, ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 97, ரூதர்ஃபோர்டு 43, சாய் சுதர்ஷன் 36, ராகுல் திவாத்தியா ஆட்டமிழக்காமல் 11, முகேஷ் குமார், குல்தீப் ஷர்மா தலா ஒரு விக்கட்) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த டெல்லி அணியின் தொடக்க வீரர் அபிஷேக் போரல் (9 பந்துகளில் 18 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தபோதும் அதிரடியாக விளையாடினார்.

மற்றொரு தொடக்க வீரர் கருண் நாயர் (18 பந்துகளில் 31 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) கே.எல். ராகுல் (14 பந்துகளில் 28 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) உடன் இணைந்து விளையாடி ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த அக்சர் படேல் (32 பந்துகளில் 39 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (21 பந்துகளில் 31 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), அஷுதோஷ் ஷர்மா (19 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி எட்டு விக்கட் இழப்பிற்கு 203 ரன் எடுத்தது.

          20 ஓவர்களில் 204 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக விளையாட வந்த குஜராத் அணியின் தொடக்க வீரரும் அணியின் அணித்தலைவருமான ஷுப்மன் கில் (7 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரர், தமிழக வீரர் சாய் சுதர்ஷன் (21 பந்துகளில் 36 ரன்) எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மூன்றாவதாகக் களமிறங்கிய ஜாஸ் பட்லர் (54 பந்துகளில் 97 ரன், 11 ஃபோர், 4 சிக்சர்) இன்று அற்புதமாக ஆடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவரோடு இணைந்து ஆடிய ரூதர்ஃபோர்டு (34 பந்துகளில் 43 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ராகுல் திவாத்தியா (3 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் குஜராத் அணிக்கு 19.2 ஓவர்களில் வெற்றியைத் தேடிதந்தனர்.

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

லக்னோ vs ராஜஸ்தான்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (180/5, எய்டன் மர்கரம் 66, ஆயுஷ் பதோனி 50, அப்துல் சமத் 30, ஹசரங்கா 2/31, ஆர்ச்சர், சந்தீப் ஷர்மா, துஷார் தேஷ்பாண்டே தலா ஒரு விக்கட்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (178/5, யசஷ்வீ ஜெய்ஸ்வால் 74, ரியன் பராக் 39, வைபவ் சூர்யவன்ஷி 34, ஆவேஷ் கான் 3/37, ஷர்துல் தாகூர் 1/34, எய்டன் மர்கரம் 1/18) 2 ரன் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் மட்டையாட முடிவுசெய்தது. ஆனால் அந்த அணியின் தொடக்க வீரர் மிட்சல் மார்ஷ் (4 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான எய்டன் மர்க்ரம் (45 பந்துகளில் 66 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) நிக்கோலஸ் பூரன் (11 ரன்), ரிஷப் பந்த் (3 ரன்) மற்றும் ஆயுஷ் பதோனி (34 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர் 1 சிக்சர்) நன்றாக ஆடினார். கடைசி ஓவரில் நாலு சிக்சர் அடித்து, அப்துல் சமத் (10 பந்துகளில் 30 ரன்) அணியின் ஸ்கோரை, 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 180 ரன் என உயர்த்தினார்.

          181 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் இன்று சஞ்சு சாம்சன் ஆடவில்லை. தொடக்க வீரர்கள் யசஸ்வீ ஜெய்ஸ்வால் (52 பந்துகளில் 74 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்), இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (20 பந்துகளில் 34 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) ராஜஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர்.

நிதீஷ் ராணா (8 ரன்) இன்று சரியாக ஆடவில்லை. ரியான் பராக் (26 பந்துகளில் 39 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), துருவ் ஜுரல் (ஆட்டமிழக்காமல் 6 ரன்), ஷிம்ரோன் ஹெட்மயர் (12 ரன்), ஷுபம் துபே (ஆட்டமிழக்காமல் 3 ரன்) ஆகியோர் வெற்றி இலக்கை எட்ட முயற்சி செய்தும் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியால் 178 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

          14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இன்று ராஜஸ்தான் அணிக்காக முதன் முறையாக ஆடி 34 ரன் எடுத்தது சிறப்பானது. லக்னோ அணியின் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories