IPL 2025: பெங்களூரு அணி சாதனை வெற்றி!

ipl 2025 games - 2026

ஐபிஎல் 2025 – தகுதி ஆட்டம் 1 – 29.05.2025 – முல்லன்பூர் – பஞ்சாப் vs பெங்களூரு

பெங்களூரு அபார வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் கிங்க்ஸ் அணியை (14.1 ஓவர்களில் 101, மார்கஸ் ஸ்டோயினிஸ் 26, ஒமர்சாய் 18, பிர்சிம்ரன் சிங் 18, ஹேசல் வுட் 3/21, சுயேஷ் ஷர்மா 3/17, யஷ் தயாள் 2/26, புவனேஷ் குமார், ஷெப்பர்ட் தலா ஒரு விக்கட்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (10 ஓவர்களில் 106/2, பில் சால்ட் 56, மாயங்க் அகர்வால் 19, ரஜத் படிதர் 15, கோலி 12, ஜேமியான், முஷீர் கான் தலா ஒரு விக்கட்) 60 பந்துகள் மீதமிருக்க, 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த பஞ்சாப் அணியின் வீரர்களில் மார்கஸ் ஸ்டோயினிஸ் (17 பந்துகளில் 26 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்)), பிரப்சிம்ரன் சிங் (10 பந்துகளில் 18 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), மற்றும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் (12 பந்துகளில் 18 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) மட்டுமே இரட்டை இலக்க ரன் சேர்த்தனர். மற்ற வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா (7 ரன்), ஜோஷ் இங்கிலீஷ் (4 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (2 ரன்), நெஹல் வதேரா (8 ரன்), ஷஷாங்க் சிங் (3 ரன்), முஷீர் கான் (பூஜ்யம் ரன்), ஹர்பிரீத் ப்ரார் (4 ரன்) என் அனைவருமே பெங்களூரு பந்துவீச்சாளர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

          102 ரன் என்ற மிக எளிய இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் விராட் கோலி (12 பந்துகளில் 12 ரன், 2 ஃபோர்)  நாலாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து களமிறங்கிய மாயங்க் அகர்வால் (13 பந்துகளில் 19 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ரஜத் படிதர் (8 பந்துகளில் 15 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் பெரிய இன்னிங்க்ஸ் ஆடவில்லை எனினும் மற்றொரு தொடக்க வீரரான பில் சால்ட் (27 பந்துகளில் 56 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) உடன் இணைந்து ஆடி 10 ஓவர்களில் அணியை வெற்றி இலக்கை அடையவைத்தனர்.

பெங்களூரு அணியின் சுழப் பந்துவீச்சாளர் சுயேஷ் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி நேரடியாக இறுதி ஆட்டத்திற்குச் செல்கிறது. பஞ்சாப் அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. 60 பந்துகள் மீதமிருக்கையில் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது ஒரு சாதனையாகும்.

          2011இல் இப்போதுள்ள பிளேஆஃப் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் மோதும்போது இரண்டாவது இடத்தில் உள்ள அணியே எப்போது முதல் தகுதி ஆட்டத்தில் வெல்வது வழக்கம். இம்முறையும் அதுவே நடந்துள்ளது.   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories