IPL 2025: பெங்களூரு அணி சாதனை வெற்றி!

ipl 2025 games - 2026

ஐபிஎல் 2025 – தகுதி ஆட்டம் 1 – 29.05.2025 – முல்லன்பூர் – பஞ்சாப் vs பெங்களூரு

பெங்களூரு அபார வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் கிங்க்ஸ் அணியை (14.1 ஓவர்களில் 101, மார்கஸ் ஸ்டோயினிஸ் 26, ஒமர்சாய் 18, பிர்சிம்ரன் சிங் 18, ஹேசல் வுட் 3/21, சுயேஷ் ஷர்மா 3/17, யஷ் தயாள் 2/26, புவனேஷ் குமார், ஷெப்பர்ட் தலா ஒரு விக்கட்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (10 ஓவர்களில் 106/2, பில் சால்ட் 56, மாயங்க் அகர்வால் 19, ரஜத் படிதர் 15, கோலி 12, ஜேமியான், முஷீர் கான் தலா ஒரு விக்கட்) 60 பந்துகள் மீதமிருக்க, 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த பஞ்சாப் அணியின் வீரர்களில் மார்கஸ் ஸ்டோயினிஸ் (17 பந்துகளில் 26 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்)), பிரப்சிம்ரன் சிங் (10 பந்துகளில் 18 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), மற்றும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் (12 பந்துகளில் 18 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) மட்டுமே இரட்டை இலக்க ரன் சேர்த்தனர். மற்ற வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா (7 ரன்), ஜோஷ் இங்கிலீஷ் (4 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (2 ரன்), நெஹல் வதேரா (8 ரன்), ஷஷாங்க் சிங் (3 ரன்), முஷீர் கான் (பூஜ்யம் ரன்), ஹர்பிரீத் ப்ரார் (4 ரன்) என் அனைவருமே பெங்களூரு பந்துவீச்சாளர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

          102 ரன் என்ற மிக எளிய இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் விராட் கோலி (12 பந்துகளில் 12 ரன், 2 ஃபோர்)  நாலாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து களமிறங்கிய மாயங்க் அகர்வால் (13 பந்துகளில் 19 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ரஜத் படிதர் (8 பந்துகளில் 15 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் பெரிய இன்னிங்க்ஸ் ஆடவில்லை எனினும் மற்றொரு தொடக்க வீரரான பில் சால்ட் (27 பந்துகளில் 56 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) உடன் இணைந்து ஆடி 10 ஓவர்களில் அணியை வெற்றி இலக்கை அடையவைத்தனர்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

பெங்களூரு அணியின் சுழப் பந்துவீச்சாளர் சுயேஷ் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி நேரடியாக இறுதி ஆட்டத்திற்குச் செல்கிறது. பஞ்சாப் அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. 60 பந்துகள் மீதமிருக்கையில் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது ஒரு சாதனையாகும்.

          2011இல் இப்போதுள்ள பிளேஆஃப் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் மோதும்போது இரண்டாவது இடத்தில் உள்ள அணியே எப்போது முதல் தகுதி ஆட்டத்தில் வெல்வது வழக்கம். இம்முறையும் அதுவே நடந்துள்ளது.   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories