IPL 2025: தோனி- சென்னை அணியின் மிக மோசமான நிலை!

ipl 2025 games - 2026


ஐ.பி.எல் 2025 – 24.05.2025 இரண்டு ஆட்டங்கள் 

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சென்னை vs குஜராத்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி (230/5, டிவால்ட் ப்ருவிஸ் 57, தேவன் கான்வே 52, உர்வில் படேல் 37, ஆயுஷ் மஹத்ரே 34, ரவீந்த ஜதேஜா 21, ஷிவம் துபே 17, பிரசித் கிருஷ்ணா 2/22, சாய் கிஷோர், ரஷீத் கான், ஷாருக் கான் தலா ஒரு விக்கட்), குஜராத் டைடன்ஸ் அணியை (18.3 ஓவர்களில் 147, சாய் சுதர்ஷன் 41, அர்ஷத் கான் 20, ஷாருக் கான் 19, அன்ஷுல் காம்போஜ் 3/13, நூர் அகமது 3/21, ஜதேஜா 2/17, கலீல் அகமது, பதிரனா தலா ஒரு விக்கட்) 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஆயுஷ் மஹத்ரே (17 பந்துகளில் 34 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் மற்றொரு தொடக்க வீரரான தேவன் கான்வே (35 பந்துகளில் 52 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் மூன்றாவதாகக் களமிறங்கிய உர்வில் படேல் (19 பந்துகளில் 37 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து முதல் 10 ஓவர்களில் 107 ரன் எடுக்க உதவினர். அவர்களுக்குப் பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே (8 பந்துகளில் 17 ரன், 2 சிக்சர்) விரைவில் ஆட்டமிழந்துவிட்டார். அடுத்து களமிறங்கிய டிவால்ட் ப்ருவிஸ் (23 பந்துகளில் 57 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்), ரவீந்தர் ஜதேஜா (18 பந்துகளில் 21 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஆகியோர் அதிரடியாக ஆடி சென்னை அணியின் ஸ்கோரை 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 230 என்ற அளவிற்கு உயர்த்தினர். 

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி பவர்பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 35 ரன் எடுத்தது. அன்ஷுல் காம்போஜ் 2 விக்கட்டுகளையும் கலீல் அகமது ஒரு விக்கட்டையும் எடுத்தார். சென்னை வித்தியாசமாக முதல் ஓவரை ரவீந்தர் ஜதேஜாவைக்கொண்டு வீசியது.  முதல் ஐந்து மட்டையாளர்களில் சாய் சுதர்ஷன் (28 பந்துகளில் 41 ரன், 6 ஃபோர்) மட்டும் சிறப்பாக ஆடினார். பிற வீரர்களான ஷுப்மன் கில் (9 பந்துகளில் 13 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஜாஸ் பட்லர் (7 பந்துகளில் 5 ரன்), ரூதர்ஃபோர்ட் (4 பந்துகளில் பூஜ்யம் ரன்), ஷாருக் கான் (15 பந்துகளில் 19 ரன், 2 சிக்சர்), ராகுல் திவாத்தியா (10 பந்துகளில் 14 ரன், 1 ஃபோர்), ரஷீத் கான் (8 பந்துகளில் 14 ரன், 1 ஃபோர்) ஆகியோர் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும்  இழந்து 147 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 83 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்ஷுல் காம்போஜ் மற்றும் நூர் அகமது இருவரும் தலா மூன்று விக்கட்டுகள் எடுத்தனர். ஜதேஜா இரண்டு விக்கட்டுகள் எடுத்தார். 

சென்னை அணியின் டிவால்ட் ப்ருவிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்தத் தோல்வியால் குஜராத் அணியின் முதலிடத்திற்கு சிக்க்சல் வந்துள்ளது. அது 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருக்கிறது ஆனால் அடுத்துவரும் இரண்டு ஆட்டங்களில் பஞ்சாப் மற்றும் பெநளூரு அணி வெற்றிபெற்றல் 19 புள்ளிகளுடன் முதலிடத்திற்குப் போட்டியிடும். ஒருவேளை  மும்பை-பஞ்சாப் ஆட்டத்தில் மும்பை வெற்றிபெற்றால் முதலிரண்டு இடத்திற்குச் செல்லும்; ஒருவேளை பஞ்சாப் அந்த அணி வெற்றி பெற்றால் 18 புள்ளிகள் மற்றும் நல்ல ரன் ரேட்டுடன் குஜராத் அணியை விட முன்னிடத்தைப் பெறும்.

ஹைதராபாத் vs கொல்கொத்தா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (278/3, ஹென்றி கிளாசன் 105, ட்ராவிஸ் ஹெட் 76, அபிஷேக் ஷர்மா 32, இஷான் கிஷன் 29, அனிகேத் வர்மா 12, சுனில் நரேன் 2/42, வைபவ் அரோரா 1/39), கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை (18.4 ஓவர்களில் 168,  மணீஷ் பாண்டே 37, ஹர்ஷித் ராணா 34, சுனில் நரேன் 31, அஜிங்க்யா ரஹானே 15,  உனத்கட் 3/24, ஈஷன் மலிங்கா 3/31, ஹர்ஷ் துபே 3/34) 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே பிளேஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. கொல்கொத்தா அணியும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால்கூட பிளேஆஃப் செல்ல முடியாது. எனவே ஒரு முக்கியத்துவம் இல்லாத இந்த ஆட்டத்தை சன்ரைசர்ஸ் அணியின் மட்டையாளர்கள் தடாலடியாக ஆடி ரசிகர்களுக்கு விருந்தளித்தார்கள். கொல்கொத்தா அணி மட்டையாளர்கள் 22 ஃபோர் மற்றும் 19 சிக்சர்கள் அடித்தார்கள். கிளாசன் 39 பந்துகளில் 105 ரன் அடித்தார். 20 ஓவர் முடிவில் அந்த அணி 3 விக்கட் இழப்பிற்கு 278 ரன் அடித்தது.

இந்த மிகக் கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய கொல்கொத்தா அணி பல தவறுகள் செய்தது. அதிரடி மட்டையாளர்கள் பலரைக் கொண்ட கொல்கொத்தா அணியில் ஒருவர் கூட இன்று எரிமலையாய் வெடிக்கவில்லை. இதனால் 18.4 ஓவர்களில் 168 ரன்னிற்கு அனைத்து விக்கட்டைகளையும் இழந்தது. இதனால் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

Entertainment News

Popular Categories