துணி தைத்து வரும் வருமானத்தில் வாழ்க்கையில் நடத்தி வரும் பாராலிம்பிக் நீச்சல் வீராங்கனை அம்பிகாபதி

02 Sep06 para olimbic - 2026

வறுமை தாண்டவமாடும் வாழ்க்கையிலும், தேசிய அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் ஜொலித்து வருகிறார் மாற்றுத்திறனாளி அம்பிகாபதி. தங்க மங்கையாக வலம் வரும் இவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகாபதி. 33 வயதான இவர், 3 அடி உயரத்தில் 5 வயது சிறுமியை போல காட்சித் தருவதால் மற்றவர்களின் கேலிக்கு பயந்து பள்ளிக்கு செல்லவில்லை. 2008-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் பங்கேற்க சென்ற போதுதான் அம்பிகாபதியின் திறமை அவருக்கே தெரிய வந்துள்ளது. விளையாட்டாக மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர் ஓட்டப்பந்தயம், தடகளம் என அனைத்திலும் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

ஊர்க்கிணற்றில் நீச்சல் பழகிய அம்பிகாபதி போட்டிக்காக நீச்சலில் தீவிரமாக பயிற்சி பெற்றார். 2015-ம் ஆண்டு மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 4 தங்கங்களை வென்றதோடு, மத்திய பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டியிலும் 3 தங்கங்களை வென்று சாதித்துள்ளார்.

துணி தைத்து வரும் வருமானத்தில் வாழ்க்கையில் மட்டுமல்லாமல், விளையாட்டிலும் எதிர்நீச்சல் போட்டு, தங்கமங்கையாக வலம் வரும் அம்பிகாபதிக்கு, நிரந்தர வருமானத்திற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பிகாபதியின் வீடு முழுவதும் இருக்கும் 100க்கும் மேற்பட்ட பதக்கங்களையும், வெற்றிக் கோப்பைகளையும் வைக்க இடமில்லாமல் மூட்டை கட்டி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்ற அரசு உதவ வேண்டும் என்பதே மங்களமேடு கிராம மக்களின் விருப்பமாக உள்ளது.

ஆப்கானில் இரட்டை வெடி குண்டு தாக்குதல் : 20 பேர் பலி; 70-வது பேர் காயம்

ஆப்கானில் நடந்த இரட்டைகுண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகியுள்ளனர். ஆப்கான் தலைநகர் காபூலில் மல்யுத்த பயிற்சி மையம் உள்ளது. இங்கு நேற்று சிலர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கரவாதிகள் பயிற்சி மையத்திற்குள் மனித குண்டாக நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.பயிற்சி மையத்திற்குள் இருந்து வீரர்கள் பலர் காயமடைந்தனர்.

பின்னர் இரண்டாவது முறையாக கார் குண்டு தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் 16 பேர் பலியாகியுள்ளனர். 65-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் பத்திரிக்கையாளர்கள் பலர் பலியாகியுள்ளனர்.இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன், ‘என்று முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்சாய் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் எதிர்பாராதவிதமாக நடத்திய தாக்குதலில் 7 போலீசார் வீர மரணம் அடைந்தனர். அதையடுத்து, போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். போலீசாரின் இந்த பதிலடி தாக்குதலில் 7 தலிபான் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில இரட்டை வெடி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories