உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான முதல் கட்ட பரிந்துரை பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி விடுபட்டார். எனினும், மொத்தம் 30 வீரர்கள் கொண்ட இறுதி பரிந்துரை பட்டியலில் அவர் நிச்சயம் இடம் பெறுவார் என தெரிகிறது. ரொனால்டோ, மெஸ்ஸி இருவரும் தலா 5 முறை ‘பலோன் டி ஆர்’ விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


