April 27, 2025, 12:04 AM
30.2 C
Chennai

படிப் படியாய் குறையும் வெங்காய விலை! முதல் ரகம் ரூ.80!

பெரிய வெங்காயம் வரத்து ஓரளவுக்கு சீரடைந்து வருவதைத் தொடர்ந்து, அதன் விலை குறையத் தொடங்கியுள்ளது. முதல் ரக வெங்காயம் நேற்று மொத்த விலையில் கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்டது.

பெரிய வெங்காயம் வரத்து குறைந்ததைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அதன் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டது. கடந்த 15 நாட்களுக்கு முன் முதல் ரக வெங்காயம் ஒரு கிலோ ரூ.180 வரை சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு உள்நாட்டு வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு தடை விதித்து, துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது. இந்த வெங்காயம் டிச.9-ம் தேதி முதன் முதலாக தமிழகத்துக்கு வந்தபோது, கிலோ ரூ.100-க்கு மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக திருச்சியில் முதல் ரக வெங்காயம், மொத்த விலையில் கிலோ ரூ.80-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தகர் சங்கச் செயலாளர் ஏ.தங்கராசு, கூறியது: திருச்சி வெங்காய மண்டிக்கு தற்போது தினந்தோறும் துருக்கி மற்றும் எகிப்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் 30 டன் அளவுக்கும், மகாராஷ்டிரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து 100 டன் அளவுக்கும் வருகிறது. இதனால் தற்போது மொத்த விலை கிலோ ரூ.80-ஆக குறைந்துள்ளது.

ALSO READ:  இந்த கொல்லம் - சென்னை ரயில் நேரத்தை மாத்த மாட்டீங்களா?

எகிப்து, துருக்கி வெங்காயங்கள் அளவில் பெரிதாக இருப்பதால் உணவகங்களுக்கு அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். சில்லறை வியாபாரிகள் நம்நாட்டு வெங்காயத்தை தான் விரும்பி, வாங்கிச் செல்கின்றனர். சில்லறை விலையில் முதல் தர வெங்காயம் கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்கின்றனர்.

வெங்காயம் தட்டுப்பாடு ஏற்படும் என முன்பே கணித்து உள்நாட்டு வெங்காய ஏற்றுமதிக்கு இரு மாதங்களுக்கு முன்பே தடை விதித்திருந்தால், விலை உயர்வை தவிர்த்திருக்கலாம். அரசு வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்திருக்காவிடில் வெங்காயத்தின் விலை பெரும் உச்சத்தை தொட்டிருக்கும்.

சின்ன வெங்காயத்தைப் பொறுத்தவரையில் தற்போது முதல் தரம் கிலோ ரூ.120-க்கும், கடைசி தரம் ரூ.60-க்கும் விற்பனையாகிறது.

தொடர்ந்து வெங்காயம் வரத்து அதிகமானால், விலை மேலும் குறையும் வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையாகலாம். மார்ச் முதல் ஜூன் வரை வெங்காயத்தின் விலை கணிசமாக குறையும் என்றார்.

ALSO READ:  கோயில் நிலங்களில் வசிப்பவர்கள் இனி வாடகைதாரர்களாக மாறினால் மட்டுமே வசிக்க முடியும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Entertainment News

Popular Categories