படிப் படியாய் குறையும் வெங்காய விலை! முதல் ரகம் ரூ.80!

onion - 2026

பெரிய வெங்காயம் வரத்து ஓரளவுக்கு சீரடைந்து வருவதைத் தொடர்ந்து, அதன் விலை குறையத் தொடங்கியுள்ளது. முதல் ரக வெங்காயம் நேற்று மொத்த விலையில் கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்டது.

பெரிய வெங்காயம் வரத்து குறைந்ததைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அதன் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டது. கடந்த 15 நாட்களுக்கு முன் முதல் ரக வெங்காயம் ஒரு கிலோ ரூ.180 வரை சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு உள்நாட்டு வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு தடை விதித்து, துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது. இந்த வெங்காயம் டிச.9-ம் தேதி முதன் முதலாக தமிழகத்துக்கு வந்தபோது, கிலோ ரூ.100-க்கு மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.

onion 1 1 - 2026

இதனிடையே மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக திருச்சியில் முதல் ரக வெங்காயம், மொத்த விலையில் கிலோ ரூ.80-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தகர் சங்கச் செயலாளர் ஏ.தங்கராசு, கூறியது: திருச்சி வெங்காய மண்டிக்கு தற்போது தினந்தோறும் துருக்கி மற்றும் எகிப்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் 30 டன் அளவுக்கும், மகாராஷ்டிரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து 100 டன் அளவுக்கும் வருகிறது. இதனால் தற்போது மொத்த விலை கிலோ ரூ.80-ஆக குறைந்துள்ளது.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

எகிப்து, துருக்கி வெங்காயங்கள் அளவில் பெரிதாக இருப்பதால் உணவகங்களுக்கு அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். சில்லறை வியாபாரிகள் நம்நாட்டு வெங்காயத்தை தான் விரும்பி, வாங்கிச் செல்கின்றனர். சில்லறை விலையில் முதல் தர வெங்காயம் கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்கின்றனர்.

வெங்காயம் தட்டுப்பாடு ஏற்படும் என முன்பே கணித்து உள்நாட்டு வெங்காய ஏற்றுமதிக்கு இரு மாதங்களுக்கு முன்பே தடை விதித்திருந்தால், விலை உயர்வை தவிர்த்திருக்கலாம். அரசு வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்திருக்காவிடில் வெங்காயத்தின் விலை பெரும் உச்சத்தை தொட்டிருக்கும்.

சின்ன வெங்காயத்தைப் பொறுத்தவரையில் தற்போது முதல் தரம் கிலோ ரூ.120-க்கும், கடைசி தரம் ரூ.60-க்கும் விற்பனையாகிறது.

தொடர்ந்து வெங்காயம் வரத்து அதிகமானால், விலை மேலும் குறையும் வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையாகலாம். மார்ச் முதல் ஜூன் வரை வெங்காயத்தின் விலை கணிசமாக குறையும் என்றார்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories