என்னம்மா இப்படி பண்றிங்க! அத்தியாவசிய பால் விலை உயர்வு!அங்கலாயும் மக்கள்!

milk - 2026

தமிழகத்தில் பால் விற்பனையில் தனியார் பங்கு அதிகமாக உள்ளன. ஆரோக்கியா, ஹெரிட்டேஜ், டோட்லா, திருமலா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்களின் பால்தான் ஓட்டல்கள், டீக்கடைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆவின் நிறுவனத்தின் பால் அரசு ஆஸ்பத்திரிகள், மாதாந்திர பால் அட்டைதாரர்கள், பால் விற்பனை மையங்கள் மற்றும் பெட்டிகடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலை பயன்படுத்துவதால் அத்தியாவசிய பொருளாக பால் கருதப்படுகிறது.தனியார் பாலைவிட ஆவின் பாலுக்கு எப்போதும் மவுசு அதிகம். குழந்தைகளுக்கு ஆவின் பால்தான் பொதுவாக கொடுக்கப்படுகிறது.

ஆவின் பால் விலை தனியார் பாலைவிட விலை குறைவாக இருப்பதால் கடைகளில் உடனே விற்பனை ஆகிவிடுகிறது.
இந்த நிலையில் தனியார் பால் விலையை உயர்த்துவதாக நிறுவனங்கள் அறிவித்தன.

அதன்படி இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்ந்துள்ளது.ஆரோக்கியா, ஹெரிட்டேஜ், எஸ்.கே.ஏ. ஆகிய நிறுவனங்களின் பால் விலை உயர்ந்துள்ளது.டோட்லா, திருமலா உள்ளிட்ட மற்ற பால் விலை நாளை முதல் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் பால் கொள்முதல் குறைவு காரணமாக இந்த விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக தனியார் பால் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பால் விலையை தொடர்ந்து தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது.முழு கொழுப்பு சத்து கொண்ட செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.54-ல் இருந்து ரூ.58 ஆகவும் அரை லிட்டர் ரூ.27-ல் இருந்து ரூ.29 ஆகவும் 175 மில்லி ரூ.10ல் இருந்து ரூ.12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நிலைப்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.48 ல் இருந்து ரூ.52 ஆகவும், அரை லிட்டர் ரூ.24-ல் இருந்து ரூ.26 ஆகவும், 200 மில்லி ரூ.10 ல் இருந்து ரூ.13 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.44-ல் இருந்து ரூ.46 ஆகவும், அரை லிட்டர் ரூ22-ல் இருந்து ஒரு ரூபாய் கூடி ரூ.23 ஆகவும், 200 மில்லி ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும் 250 மில்லி ரூ.12-ல் இருந்து ரூ.14 ஆகவும் உயர்ந்துள்ளது.

தயிர் ஒரு லிட்டர் ரூ.52-ல் இருந்து ரூ.56 ஆகவும், அரை லிட்டர் ரூ.26-ல் இருந்து ரூ.28 ஆகவும், 180 கிராம் பாக்கெட் ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும், 100 கிராம கப் ரூ.10 ல் இருந்து ரூ.12 ஆகவும், 200 கிராம் கப் ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆகவும் அதிகரித்துள்ளது.

டோட்லா பால் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது. ரூ.62 ஆகவும், அரை லிட்டர் ரூ.31 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் ரூ.54 ஆகவும், அரை லிட்டர் ரூ.28 ஆகவும் சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.46 ஆகவும், அரை லிட்டர் ரூ.23 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தயிர் ஒரு லிட்டர் ரூ.60 ஆகவும், அரை லிட்டர் ரூ.30 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆரோக்கியா நிலைப்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.52-ல் இருந்து ரூ.54 ஆகவும், அரை லிட்டர் ரூ.54-ல் இருந்து ரூ.56 ஆகவும் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.60-ல் இருந்து ரூ.62 ஆகவும்,

அரை லிட்டர் ரூ.30-ல் இருந்து ரூ.31 ஆகவும் சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.47-ல் இருந்து ரூ.49 ஆகவும், அரை லிட்டர் ரூ.24-ல் இருந்து ரூ.25 ஆகவும் உயர்ந்துள்ளது.

திருமலா பால், ராஜ்பால் விலை உயர்வு 22-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அனைத்து தனியார் பால் விலையும் உயர்வதால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கூலி, மாத சம்பளம் பெறும் தனியார் நிறுவன ஊழியர்கள் மாதாந்திர செலவினம் அதிகரிப்பதால் கவலை அடைந்துள்ளனர்.

பால் விலை உயர்ந்துள்ளதால் ஓட்டல், டீ கடைகளில் டீ, காபி விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டீ ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இதை விட அதிகரித்தால் விற்பனை பாதிக்கபடலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories