December 6, 2025, 6:02 AM
23.8 C
Chennai

என்னம்மா இப்படி பண்றிங்க! அத்தியாவசிய பால் விலை உயர்வு!அங்கலாயும் மக்கள்!

milk - 2025

தமிழகத்தில் பால் விற்பனையில் தனியார் பங்கு அதிகமாக உள்ளன. ஆரோக்கியா, ஹெரிட்டேஜ், டோட்லா, திருமலா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்களின் பால்தான் ஓட்டல்கள், டீக்கடைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஆவின் நிறுவனத்தின் பால் அரசு ஆஸ்பத்திரிகள், மாதாந்திர பால் அட்டைதாரர்கள், பால் விற்பனை மையங்கள் மற்றும் பெட்டிகடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலை பயன்படுத்துவதால் அத்தியாவசிய பொருளாக பால் கருதப்படுகிறது.தனியார் பாலைவிட ஆவின் பாலுக்கு எப்போதும் மவுசு அதிகம். குழந்தைகளுக்கு ஆவின் பால்தான் பொதுவாக கொடுக்கப்படுகிறது.

ஆவின் பால் விலை தனியார் பாலைவிட விலை குறைவாக இருப்பதால் கடைகளில் உடனே விற்பனை ஆகிவிடுகிறது.
இந்த நிலையில் தனியார் பால் விலையை உயர்த்துவதாக நிறுவனங்கள் அறிவித்தன.

அதன்படி இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்ந்துள்ளது.ஆரோக்கியா, ஹெரிட்டேஜ், எஸ்.கே.ஏ. ஆகிய நிறுவனங்களின் பால் விலை உயர்ந்துள்ளது.டோட்லா, திருமலா உள்ளிட்ட மற்ற பால் விலை நாளை முதல் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் பால் கொள்முதல் குறைவு காரணமாக இந்த விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக தனியார் பால் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பால் விலையை தொடர்ந்து தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது.முழு கொழுப்பு சத்து கொண்ட செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.54-ல் இருந்து ரூ.58 ஆகவும் அரை லிட்டர் ரூ.27-ல் இருந்து ரூ.29 ஆகவும் 175 மில்லி ரூ.10ல் இருந்து ரூ.12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நிலைப்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.48 ல் இருந்து ரூ.52 ஆகவும், அரை லிட்டர் ரூ.24-ல் இருந்து ரூ.26 ஆகவும், 200 மில்லி ரூ.10 ல் இருந்து ரூ.13 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.44-ல் இருந்து ரூ.46 ஆகவும், அரை லிட்டர் ரூ22-ல் இருந்து ஒரு ரூபாய் கூடி ரூ.23 ஆகவும், 200 மில்லி ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும் 250 மில்லி ரூ.12-ல் இருந்து ரூ.14 ஆகவும் உயர்ந்துள்ளது.

தயிர் ஒரு லிட்டர் ரூ.52-ல் இருந்து ரூ.56 ஆகவும், அரை லிட்டர் ரூ.26-ல் இருந்து ரூ.28 ஆகவும், 180 கிராம் பாக்கெட் ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும், 100 கிராம கப் ரூ.10 ல் இருந்து ரூ.12 ஆகவும், 200 கிராம் கப் ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆகவும் அதிகரித்துள்ளது.

டோட்லா பால் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது. ரூ.62 ஆகவும், அரை லிட்டர் ரூ.31 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் ரூ.54 ஆகவும், அரை லிட்டர் ரூ.28 ஆகவும் சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.46 ஆகவும், அரை லிட்டர் ரூ.23 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தயிர் ஒரு லிட்டர் ரூ.60 ஆகவும், அரை லிட்டர் ரூ.30 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆரோக்கியா நிலைப்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.52-ல் இருந்து ரூ.54 ஆகவும், அரை லிட்டர் ரூ.54-ல் இருந்து ரூ.56 ஆகவும் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.60-ல் இருந்து ரூ.62 ஆகவும்,

அரை லிட்டர் ரூ.30-ல் இருந்து ரூ.31 ஆகவும் சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.47-ல் இருந்து ரூ.49 ஆகவும், அரை லிட்டர் ரூ.24-ல் இருந்து ரூ.25 ஆகவும் உயர்ந்துள்ளது.

திருமலா பால், ராஜ்பால் விலை உயர்வு 22-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அனைத்து தனியார் பால் விலையும் உயர்வதால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கூலி, மாத சம்பளம் பெறும் தனியார் நிறுவன ஊழியர்கள் மாதாந்திர செலவினம் அதிகரிப்பதால் கவலை அடைந்துள்ளனர்.

பால் விலை உயர்ந்துள்ளதால் ஓட்டல், டீ கடைகளில் டீ, காபி விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டீ ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இதை விட அதிகரித்தால் விற்பனை பாதிக்கபடலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories