December 6, 2025, 2:39 AM
26 C
Chennai

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்! சோதனையில் சிக்கிய செல்போன்கள்!

kiran - 2025

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு சிறையிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் எதிரொலியாக சிறைச்சாலையில் நடத்திய அதிரடி சோதனையில் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மிரட்டியதாக சிறையிலுள்ள தில்லி நபர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று (ஜன.20) மதியம் 1 மணியளவில் அழைப்பு ஒன்று வந்தது. மறுமுனையில் ஆங்கிலத்தில் பேசிய நபர், புதுச்சேரி ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். உடனடியாக இத்தகவல் பெரியகடை, ஒதியஞ்சாலை காவல்துறையினர்க்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பெரியகடை காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு ஆளுநர் கிரண்பேடியும் இருந்தார். ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள சாலைகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. காவல்துறையினர் ஆளுநர் மாளிகை முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

இதேபோல் ரயில் நிலையத்திலும் ஒதியஞ்சாலை காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டனர். அங்கு இருந்த ரயில்கள் மற்றும் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. ஆனால், இதிலும் எதுவும் சிக்கவில்லை.

அதேசமயம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

தமிழக காவல்துறையின் தகவலின் அடிப்படையில் காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இருந்து அழைப்பு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த டிசம்பர் 11-ம் தேதி கார் திருட்டு வழக்கில் பெரியகடை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லியைச் சேர்ந்த நித்தீஸ் சர்மா (33) என்பவர் தான் செல்போன் மூலம் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பது தெரிந்தது.

இவர் ஆளுநர் மாளிகை மட்டுமின்றி, தமிழக காவல் கட்டுப்பாட்டு அறை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கும் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இது தொடர்பாக பெரியகடை மற்றும் ஒதியஞ்சாலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் காலாப்பட்டு சிறையில் காவலர்கள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 10 செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள், சார்ஜர்களை பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories