நினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020!

IMG 20200124 WA0051 - 2026

1971ல் சேலத்தில் தி.க. கழிசடைகள் நடத்திய ஆபாச ஊர்வலம் தொடர்பான செய்திகள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.

துக்ளக், தி ஹிண்டு, தினமணி ஆகிய பத்திரிகைகள் பழைய செய்திகளை மீண்டும் வெளியிட்டு, மக்களுக்கு வரலாற்றின் கறை படிந்த பக்கங்களை நினைவுபடுத்தி இருக்கின்றன.

வரலாற்று அனுபவங்களில் இருந்து பாடம் கற்காதவன் முட்டாள். திமு.க. ஆட்சியில் இருந்ததால் அதிகாரத் திமிரில் தி.க. கழிசடைகள் நடத்திய 1971 அராஜகம் குறித்து கடவுளை நம்புவோர் அனைவரும் அறிவது அவசியம்,. இல்லாவிட்டால் ‘கடவுளை நம்புபவன் முட்டாள்’ என்று பல இடங்களில் தி.க. கழிசடைகள் வைத்துள்ள வாசகம் உண்மையாகிவிடும்.

தினமணியின் அன்றைய ஆசிரியர் திரு.ஏ.என்.சிவராமன் எழுதிய தினமணி தலையங்கமும் (16.02.1971), ஏ.என்.எஸ். டயரி் குறிப்புகளில் எழுதிய விமர்சனமும் (17.02.1971), இன்றைய (24.01.2020) தினமணி நாளிதழில் வெளியாகி உள்ளன.

உண்மைகள் உறங்குவதில்லை.

துக்ளக் பொன்விழாவில் இந்த உண்மையைத் தான் நடிகர் ரஜினிகாந்த் சொன்னார். அவரை மன்னிப்பு கேட்குமாறு மிரட்டினார்கள். அவர் அதனை நாகரிகமாக மறுத்திருக்கிறார். ‘உண்மையைச் சொன்னதற்காக மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ என்று அவர் சொன்னது, தமிழகத்தில் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்விஷயத்தில் திமுகவுக்கு வக்காலத்து வாங்கும் அதிமுகவினரை என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஜெயலலிதா அம்மையார் இருந்திருந்தால் இப்படி அதிமுகவினர் உளறுவார்களா?

இப்போது ரஜினிக்குக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள் சில தி.க. காலிகள். இந்த வன்முறையாளர்களை எந்த அரசியல் தலைவரும் கண்டிக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தி ஹிண்டு தவிர்த்து வேறெந்த ஊடகமும் தி.க.வினரின் மிரட்டல் போக்கைக் கண்டிக்கவில்லை. அந்தப் பத்திரிகையும் கூட இந்தக் கொலை மிரட்டலை கண்டுகொள்ளவில்லை.

அதிமுக அரசுக்கு உண்மையிலேயே மாநிலத்தைத் தாங்கள் தான் ஆள்கிறோம் என்ற எண்ணம் இருக்குமானால், ரஜினிக்குக் கொலை மிரட்டல் விடுத்த ரௌடிகளை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

2020லேயே பலரது முன்னிலையில் இப்படி அராஜகமாகப் பேசுவோர் 1971இல் என்னவெல்லாம் பேசி இருப்பார்கள் என்பதை யூகிக்க முடிகிறது. 1971இல் தி.க.வினருக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தார் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி. அதேபோல, இன்றைய முதல்வர் எட்ப்பாடி பழனிசாமியும், ரஜினிக்குக் கொலை மிரட்டல் விடுத்த குண்டர்களுக்கு ஆதரவாக இருக்கப் போகிறாரா? நாம் எந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

அன்றைய அராஜகத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டிய கயவர்கள் இந்த நாத்திக நாதாரிகள். ஆனால், உண்மைகள் வெளிவந்துவிட்டதே என்ற ஆங்காரத்தில், ரஜினிக்குக் கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாநிலத்தில் அமைதியைப் பேண வேண்டிய அரசு இனிமேலும் பொறுமை காக்கக் கூடாது. இந்த விஷயத்தில் மாநிலத்தில் உள்ள தனது கூட்டணி நண்பர்களை நிர்பந்திப்பது பாஜக தலைவர்களின் கடமை. அதிமுக அரசு தொடர்ந்து நாடகம் ஆடினால், மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக வேண்டும்.

நினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories