ஊரடங்கு: ஒன்று கூடி விளையாட்டு! ஓடி ஒளிந்த போது நேர்ந்த விபரீதம்!

arumugam 1 1 - 2026

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற காவல்துறையினரும் சுகாதாரத்துறையினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சிலர் அலட்சியமாக நடந்து வருகின்றனர். அவர்களை ட்ரோன் மூலம் போலீஸார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஊரடங்கில் மொட்டை மாடியில் லுடோ கேம் விளையாடியவர்கள் போலீஸுக்கு பயந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் 4-வது மாடியிலிருந்து ஒருவர் விழுந்து பலியாகியுள்ளார். இதுகுறித்து கண்ணகி நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கண்ணகிநகரைச் சேர்ந்த சரோஜா என்பவர் கண்ணகி நகர் காவல் நிலையில் கொடுத்த புகாரில், “என் கணவர் பாலசுந்தரம், இருதய நோயால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

game 1 1 - 2026

எங்களுக்கு 3 மகன்களும் 4 மகள்களும் பிறந்தனர். இதில் ஒரு மகனும் மகளும் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர். என் மகன் ஆறுமுகத்தை (34) தவிர மற்றவர்களுக்குத் திருமணமாகிவிட்டது. ஆறுமுகத்தோடு நான் குடியிருந்து வருகிறேன். ஆறுமுகம், 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஆட்டோ ஓட்டிவந்தான். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோ ஓட்டாமல் வீட்டிலேயே இருந்தான்.

வேலை இல்லாததால் கொரோனா மருந்து அடிக்கும் பணிக்கு தி.நகருக்குச் சென்றுவந்தான். ஒரு நாளைக்கு 400 ரூபாய் சம்பளம் கிடைத்தது. கடந்த 16.4.2020-ம் தேதி தி.நகருக்கு வேலைக்குச் சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்தான். பின்னர், தன்னுடைய நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் வெளியில் சென்றான். இரவு 8.30 மணியளவில் வெங்கடேஷ், வீட்டுக்கு வந்து நானும் ஆறுமுகம் உட்பட சிலர் சுனாமி நகர் 42-வது பிளாக் மொட்டை மாடியில் லுடோ கேமை செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தோம்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

அப்போது மாடிப்படியில் யாரோ பேசும் சத்தம் கேட்டது. ஊரடங்கு உத்தரவில் சமூக இடைவெளி விடச் சொல்லியிருக்கும் இந்த நேரத்தில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்ததால் போலீஸ்தான் வருகிறார்களோ என்ற பயத்தில் இரண்டு பேர் தண்ணீர் தொட்டிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டனர். இன்னும் இரண்டு பேர் வேறு இடத்தில் மறைந்துகொண்டனர். அப்போது ஆறுமுகம் ஒளிய இடம் தேடி, கேபிள் வயர் வழியாகக் கீழே இறங்கினார்.

அப்போது வயர் அறுந்து 4-வது மாடியிலிருந்து ஆறுமுகம் கீழே விழுந்தான். அதில் அவனுக்குத் தலையில் அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் இறந்துவிட்டான் என்று கூறினான். இதையடுத்து நான், கண்ணகி நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தேன். அதன்பேரில் கண்ணகி நகர் போலீஸார், ஆறுமுகத்தின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனவே, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, என் மகனின் சடலத்தை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

madi 1 1 - 2026

சரோஜா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்குபதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், ஊரடங்கு சமயத்தில் ஆறுமுகம் மற்றும் அவரின் நண்பர்கள் செல்போனில் ஒன்றாகச் சேர்ந்து கேம் விளையாடியுள்ளனர். அப்போது யாரோ ஒருவர் போனில், `சார்… இங்கு வாருங்கள்’ என்று பேசியுள்ளார். அதைக்கேட்ட ஆறுமுகம், வெங்கடேசன் மற்றும் அவரின் நண்பர்கள் போலீஸுக்கு பயந்து தப்பி ஓடியபோது ஆறுமுகம் கீழே விழுந்து இறந்தது தெரியவந்துள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இந்தச் சம்பவம் கண்ணகி நகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories