ஊரடங்கு: ஒன்று கூடி விளையாட்டு! ஓடி ஒளிந்த போது நேர்ந்த விபரீதம்!

arumugam 1 1 - 2026

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற காவல்துறையினரும் சுகாதாரத்துறையினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சிலர் அலட்சியமாக நடந்து வருகின்றனர். அவர்களை ட்ரோன் மூலம் போலீஸார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஊரடங்கில் மொட்டை மாடியில் லுடோ கேம் விளையாடியவர்கள் போலீஸுக்கு பயந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் 4-வது மாடியிலிருந்து ஒருவர் விழுந்து பலியாகியுள்ளார். இதுகுறித்து கண்ணகி நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கண்ணகிநகரைச் சேர்ந்த சரோஜா என்பவர் கண்ணகி நகர் காவல் நிலையில் கொடுத்த புகாரில், “என் கணவர் பாலசுந்தரம், இருதய நோயால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

game 1 1 - 2026

எங்களுக்கு 3 மகன்களும் 4 மகள்களும் பிறந்தனர். இதில் ஒரு மகனும் மகளும் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர். என் மகன் ஆறுமுகத்தை (34) தவிர மற்றவர்களுக்குத் திருமணமாகிவிட்டது. ஆறுமுகத்தோடு நான் குடியிருந்து வருகிறேன். ஆறுமுகம், 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஆட்டோ ஓட்டிவந்தான். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோ ஓட்டாமல் வீட்டிலேயே இருந்தான்.

வேலை இல்லாததால் கொரோனா மருந்து அடிக்கும் பணிக்கு தி.நகருக்குச் சென்றுவந்தான். ஒரு நாளைக்கு 400 ரூபாய் சம்பளம் கிடைத்தது. கடந்த 16.4.2020-ம் தேதி தி.நகருக்கு வேலைக்குச் சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்தான். பின்னர், தன்னுடைய நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் வெளியில் சென்றான். இரவு 8.30 மணியளவில் வெங்கடேஷ், வீட்டுக்கு வந்து நானும் ஆறுமுகம் உட்பட சிலர் சுனாமி நகர் 42-வது பிளாக் மொட்டை மாடியில் லுடோ கேமை செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தோம்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

அப்போது மாடிப்படியில் யாரோ பேசும் சத்தம் கேட்டது. ஊரடங்கு உத்தரவில் சமூக இடைவெளி விடச் சொல்லியிருக்கும் இந்த நேரத்தில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்ததால் போலீஸ்தான் வருகிறார்களோ என்ற பயத்தில் இரண்டு பேர் தண்ணீர் தொட்டிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டனர். இன்னும் இரண்டு பேர் வேறு இடத்தில் மறைந்துகொண்டனர். அப்போது ஆறுமுகம் ஒளிய இடம் தேடி, கேபிள் வயர் வழியாகக் கீழே இறங்கினார்.

அப்போது வயர் அறுந்து 4-வது மாடியிலிருந்து ஆறுமுகம் கீழே விழுந்தான். அதில் அவனுக்குத் தலையில் அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் இறந்துவிட்டான் என்று கூறினான். இதையடுத்து நான், கண்ணகி நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தேன். அதன்பேரில் கண்ணகி நகர் போலீஸார், ஆறுமுகத்தின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனவே, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, என் மகனின் சடலத்தை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

madi 1 1 - 2026

சரோஜா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்குபதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், ஊரடங்கு சமயத்தில் ஆறுமுகம் மற்றும் அவரின் நண்பர்கள் செல்போனில் ஒன்றாகச் சேர்ந்து கேம் விளையாடியுள்ளனர். அப்போது யாரோ ஒருவர் போனில், `சார்… இங்கு வாருங்கள்’ என்று பேசியுள்ளார். அதைக்கேட்ட ஆறுமுகம், வெங்கடேசன் மற்றும் அவரின் நண்பர்கள் போலீஸுக்கு பயந்து தப்பி ஓடியபோது ஆறுமுகம் கீழே விழுந்து இறந்தது தெரியவந்துள்ளது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

இந்தச் சம்பவம் கண்ணகி நகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories