January 20, 2025, 6:59 PM
26.2 C
Chennai

என் தற்கொலைக்கு காரணம் கணவரும்… கைப்பட கடிதம் எழுதி தூக்கில் தொங்கிய இளம்பெண்!

pathma priya
pathma priya

திருமணம் முடிந்த 2 மாதத்தில் இளம் பெண் ஒருவர் வரதட்சணை கொடுமை காரணமாக வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் பத்மபிரியா. அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்மப்ரியா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், மேலூரை சேர்ந்த காவலர் ராஜாராம் என்பவருக்கும் பத்மப்ரியாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்து ராஜாராமின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு பத்மப்ரியாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்ததை தொடர்ந்து பத்மபிரியா ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன்னுடைய கணவர் மீது வரதட்சனை கொடுமை புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் வரதட்சணை தொடர்பாக எழுந்த தகராறில் ராஜாராமின் குடும்பத்தினர் பத்மபிரியாவை அவருடைய பெற்றோரின் வீட்டிற்கே அனுப்பி வைத்தனர். பெற்றோர் வீட்டிற்கு சென்ற பத்மப்ரியா மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மன அழுத்தம் அதிகமாகி நேற்று தன்னுடைய அறையிலேயே தூக்கு போட்டு பத்மப்ரியா தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பத்மப்ரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், பத்மபிரியா கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

ALSO READ:  ஒரு நாள் வெடிக்கிறதால ஒண்ணும் ஆகிடாது; பட்டாசு வெடிங்க, தீபாவளிய சந்தோசமா கொண்டாடுங்க!

அந்த கடிதத்தில், எனது தற்கொலைக்கு முழு காரணம் என்னுடைய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரே என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்..

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம்

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின்

பயணிகள் கவனத்துக்கு… நெல்லை சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. திருநெல்வேலி சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்எழும்பூர்...