காதல் வலையில் திருநங்கைகளை வீழ்த்தி.. பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த முகமது உசேன் !

thirunankai

தமிழகத்தில் திருநங்கைகளை குறிவைத்து ஏமாற்றி பண மோசடி செய்த நபர் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் திருநங்கை பிரியங்கா. இவருக்கும் புழல் பகுதியை சேர்ந்த முகமது உசேன் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திருநங்கை பிரியங்காவை திருமணம் செய்துகொண்டு வாழ்வதாக ஆசை வார்தைகள் கூறி அவருடன் பழகிவந்த முகமது உசேன் தான் கப்பலில் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார்.

thirunankai

பிரியாங்காவின் டெபிட் கார்ட் கைபேசி என அனைத்தையும் முகமது பயன்படுத்திவந்துள்ளார். இதனை பயன்படுத்தி பிரியங்காவின் வங்கி கணக்கில் இருந்து அவ்வபோது 5ஆயிரம் 10ஆயிரம் என 2லட்சத்துக்கும் மேல் பணத்தை உசேன் திருடி சொகுசாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தெரிந்து பிரியங்கா உசேனிடம் விசாரித்த போது பிரியங்காவுடனான தொடர்பை உசேன் துண்டித்துள்ளார். இந்நிலையில் முகமது உசேன் மீது நடவடிக்கை எடுக்ககோரி கடந்த மார்ச் மாதம் பிரியங்கா அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலிசார் சிஎஸ்ஆர் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டம் பகுதியில் யுவஸ்ரீ என்ற திருநங்கை கடந்த வாரம் மண்ணெனய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை தொடர்பான புகைப்படங்கள் திருநங்கைகளின் வாட்ஸ் ஆப் குழுக்களில் பரவியுள்ளது அதை பார்த்தபோதுதான் சென்னை அமைந்தகரை சேர்ந்த திருநங்கை பிரியங்காவை ஏமாற்றிய முகமது உசேன் தூத்துக்குடியில் யுவஸ்ரீயுடன் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து முகமது உசேனையை அமைந்தகரை போலிசார் மோசடி புகாரின் அடிப்படையில் தூத்துக்குடியில் கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.

இதோடு யுவஸ்ரீ கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, தற்போது முகமதிடம் போலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories