December 6, 2025, 7:12 AM
23.8 C
Chennai

வீட்டிலேயே வெட்டி பழகிவிட்ட மக்கள்! காற்றாடும் சலூன் கடைகள்!

Screenshot_2020_0818_161459

கொரோனா பரவும் அச்சத்தால் மக்கள், சலூன் கடைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடிதிருத்தம் (கட்டிங்) மற்றும் முகச்சவரம் (ஷேவிங்) செய்து கொள்ள பழகிவிட்டதால் சலூன்கடைகள் வாடிக்கையாளர்கள் வராமல் காற்று வாங்குகின்றன.

அதனால், அந்தத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் கண்கலங்கி நிற்கின்றனர்.

சீனாவில் உருவான கரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவை உருவாக்கிவருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் நோய் சமூகத்தில் அடித்தட்டு மக்கள் பார்க்கும் பல்வேறு பாரம்பரியத் தொழில்களை அடையாளம் தெரியாமல் அழித்துக் கொண்டிருக்கிறது.

அதில் முக்கியமானது சலூன் கடை. சலூன் கடைகளில் ஒரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்தப்படும் துணிகள், கத்தரிக்கோல்கள், டிரிம்மர்கள், மற்றும் ஹேர்ஸ்டைலிங் செய்ய பயன்படும் மற்ற கருவிகள் உள்பட அனைத்தும் அனைவருக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பாதுகாப்பாற்ற சூழலால் கரோனா பரவ வாய்ப்புள்ளதால் வாடிக்கையாளர்கள் கடந்த 4 மாதங்களாக சலூன்கடைளுக்குச் செல்ல ஆர்வம் காட்டவில்லை. வீட்டிலேயே முடிதிருத்தம், முகச்சவரம் உள்ளிட்டவற்றை செய்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

சிறுவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களே முடிதிருத்தம் செய்து விடத்தொடங்கிவிட்டனர். தற்போது அதுவே பழகிவிட்டதால், சலூன் கடைகள் திறந்தும், வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு வந்து முடி வெட்டவும், சவரம் செய்யவும் ஆர்வம் காட்டவில்லை.

சலூன்கடைகளுக்கு இந்த நிலையென்றால், அழகுநிலையங்களின் நிலை இன்னும் பரிதமாக உள்ளது. பெரும்பாலான அழகு நிலையங்கள் மதுரையில் மூடபட்டுள்ளன.

தற்போது சலூன் கடைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்பட்டிருந்தும், வாடிக்கையாளர்கள் வராமல் காற்றாடுகின்றன.

Screenshot_2020_0818_161331

சலூன்கடைகள், அழகு நிலையங்கள் மூலம் கொரோனா பரவுவதைத் தடுக்க தடை செய்யப்பட்டப் பகுதிகளில் மட்டும் சலூன்கடைகள், அழகு நிலையங்கள் செயல்வதற்கு அனுமதியில்லை என்றும், தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வரும் தொழிலாளர்களை சலூன்கடைகளில், அழகு நிலையங்களில் பணியமர்த்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கடைகளில் சமூக இடைவெளியை பின்பிற்றவும், முககவசம், கிருமி நாசினி வழங்குவதையும் கடை உரிமையாளர்கள் உறுதி செய்கொள்ள அறிவுறுத்தப்பட்டள்ளனர்.

இப்படி பல கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் அறிவுறுத்தப்பட்டும் வாடிக்கையாளர்கள் சலூன்கடைகளுக்கு வரவில்லை. அதனால், இந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து கண்கலங்கி நிற்கின்றனர்.

இதுகுறித்து ஒத்தக்கடையைச் சேர்ந்த சலூன்கடைக்காரர் சுரேஷ் கூறுகையில், ”பிஏ பொருளாதாரம் படித்துள்ளேன். சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்தேன். திருமணத்திற்குப் பிறகு ஒரு வழக்கறிஞரிடம் கிளார்க் வேலைப்பார்த்தேன். அதில் போதிய வருமானம் கிடைக்காததால் அப்பா பார்த்துவந்த தொழிலை தற்போது பார்த்து வருகிறேன்.

ஊரடங்கிற்கு முன்பு வரை ஞாயிற்றுக்கிழமைகளில் 40 பேரும், மற்ற நாட்களில் 20 பேரும் வருவார்கள். குடும்பத்தை நடத்துவதற்கு ஒரளவு வருமானம் கிடைத்தது.

தற்போது ஒரு நாளைக்கு 2 பேர் வந்தாலே அபூர்வமாக இருக்கிறது. ஊரடங்கிற்கு முன், செலவுபோக ஒரு நாளைக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை சம்பாதித்தேன்.

தற்போது 200 ரூபாய் கூட வீட்டிற்கு கொண்டு போவதே சிரமமாக உள்ளது. நலவாரியத்தில் உள்ள முடிதிருத்தம் தொழிலாளர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கியது. எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதுவரை கடன் வாங்கிதான் குடும்பம் நடத்துகிறோம்.

கடந்த வாரம் என் மனைவிக்கு உடல் நலமில்லாமல் பக்கத்து வீட்டில் கடன் வாங்கி சென்று மருத்துவம் பார்த்தேன். அவர்களுக்கு எப்படி திருப்பிக் கொடுப்பது என்று தெரியாமல் வருமானம் இல்லாமல் தடுமாறி நிற்கிறேன். யாராவது வாடிக்கையாளர் வந்தால் அவரை கடவுள் போல் பார்க்கிறேன்.

முன்பு முகச்சவரம் மட்டுமே வீட்டில் செய்து கொண்டனர். தற்போது முடிதிருத்தமும் செய்ய ஆரம்பித்துவிட்டதால் இனி கரோனா ஒய்ந்தாலும் இந்தத் தொழில் முன்போல் நடக்குமா? என்பது தெரியவில்லை. அதனால், அரசு என்னைப்போன்ற படித்த இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும் ” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories