February 13, 2025, 11:52 AM
25.6 C
Chennai

தாமிரபரணியில் பெருக்கெடுத்த வெள்ளம்; நீரில் மூழ்கிய நெல்லை மாநகரப் பகுதிகள்!

kurukkuthurai-murugan-temple
kurukkuthurai-murugan-temple

இடைவிடாத மழையின் காரணத்தால், திருநெல்வேலி மாவட்ட பிரதான அணைகளிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டது. இதை அடுத்து, திருநெல்வேலி மாநகர் பகுதியில் தாமிரபரணிக் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், நெல்லை மாவட்டத்தின் முக்கிய அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகியவை நிரம்பிவிட்டன. இதை அடுத்து, அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று இந்த அணைகளிலிருந்து 22,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் காட்டாற்று வெள்ளம் சேர்ந்து திருநெல்வேலி மாநகரப் பகுதி தாமிரவருணி ஆற்றில் சுமார் 25 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நெல்லை மாநகரப் பகுதிகளான மீனாட்சிபுரம், கைலாசபுரம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்தது.

manimutharu-dam-inspect
மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணை பகுதிகளில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் முகாமிட்டு ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.

வண்ணாரப்பேட்டை எட்டுத்தொகை தெரு, திருக்குறிப்பு தொண்டர் தெரு, இசக்கியம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் 150க்கும் மேற்பட்ட வீடுகளை புதன்கிழமை காலை வெள்ள நீர் சூழ்ந்தது.

தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு வந்தால், வழக்கமாகவே குறுக்குத்துறை முருகன் கோயில் மண்டபத்தை நீர் சூழ்ந்துவிடும். தாமிரபரணி ஆற்றுக் கரையில் உள்ள குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்துக் கொண்டு, தாமிரபரணியில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

kallidai-tamirabarani
kallidai-tamirabarani

தாமிரபரணியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், பெருநை ஆற்றைக் கடந்து செல்லும் சேரன்மகாதேவியில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று பகல், அடுத்த ஆறு மணி நேரத்திற்கு நெல்லை தூத்துக்குடி தென்காசி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

tamirabarani-flood
tamirabarani-flood

கல்லிடைக்குறிச்சி பழைய பாலம் பகுதி தாமிரபரணி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கியது. புதிய பாலப் பகுதியில் போலீஸார் எவரையும் அனுமதிக்கவில்லை. கனடியன் கால்வாய் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துச் செல்வதால், தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் அளவில் மூழ்கித் தெரிகிறது. தற்போதும் பலத்த மழை பெய்து வருவதால், தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories