May 18, 2025, 7:11 PM
30.5 C
Chennai

விருத்தாசலத்தில் மகன், மகளை கொன்ற தாய் தற்கொலை..

விருத்தாச்சலத்தில் குடும்ப பிரச்னை காரணமாக மகன், மகளை கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ராமச்சந்திரன்பேட்டயைச் சேர்ந்தவர் செ.குமார் (51). கடலூர் சாலை அருகே இந்திராநகரில் சொந்தமாக லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவர் கரூரைச் சேர்ந்த சாஹிராபானுவை (40), காதலித்து திருமணம் செய்துள்ளார். 

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, இவர்கள் இந்திரா நகரில் உள்ள மகாலட்சுமி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  7 ஆம் வகுப்பு படிக்கும் மகன் பரத் (12), 5 ஆம் வகுப்பு படிக்கும் மகள்  ஹேமவர்ஷினி (10) ஆகியோர் உள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவில் வழக்கம்போல் அனைவரும் வீட்டில் தூங்கி உள்ளனர்.  குமார் வீட்டில் உள்ள ஹாலில் படுத்துள்ளார். சாஹிராபானு தனது இரண்டு குழந்தைகளுடன் அறைக்குள் படுத்து தூங்கி உள்ளனர்.  காலையில் குழந்தைகளை  பள்ளிக்கு அனுப்ப வெகு நேரமாகியும்,  கதவு திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று குமார் பார்த்துள்ளார். 

images 90

அப்போது தாய், மகன், மகள் என மூவரும் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு,  கதறி அழுது உள்ளார்.  இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.  

ALSO READ:  கொல்லம் ரயில் உள்பட நான்கு ரயில்களில் பெட்டிகள் மாற்றம்!

தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் மூன்று உடல்களையும்,  மீட்டு  விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மூன்று பேர் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது.

இது குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் குமார் மற்றும் அவரது மனைவி சாஹிராபானுக்கு  இடையே, கடந்த மூன்று மாதமாக பிரச்னை இருந்து வந்ததாகவும்,  ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது இல்லை என கூறப்படுகிறது. 

மேலும், மூன்று மாதமாக   குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகவும், அதனால் மனமுடைந்த குமாரின் மனைவி சாஹிராபானு,  தனது மகன், மகளின் மூக்கில் பஞ்சு வைத்து அடைத்து,  மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டதாகவும், அதன் பின்னர் சாஹிராபானுவும் மின்விசிறியில் தூக்கில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் இறந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.

ALSO READ:  காலமானார் மூத்த தேசபக்தர் குமரி அனந்தன்! தலைவர்கள் இரங்கல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழந் தமிழகத்தின் அடையாளமே காவி எனும் ஆன்மிகம்தான்! – ஸ்டாலினுக்கு இந்து முன்னணி அறிவுரை!

பாரத நாட்டில் தமிழகத்தில் தான் அதிக கோவில்கள் உள்ளன. ஆன்மீகத்தோடு பின்னிப்பிணைந்த கலாச்சாரமும் பண்பாடும் தமிழகத்தில் இன்றுவரை போற்றப்பட்டு வருகிறது.

பஞ்சாங்கம் மே 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர் சேர்க்கை – விவரம்!

நேர்முகத்தேர்வு விவரங்களுக்கு கீழ்க்காணும் ~link 🔗~ஐ அழுத்தவும்

பெரியண்ணன் டிரம்ப்புக்கு… இந்திய தேசபக்தையின் கடிதம்!

ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.

வெளிவராத ரகசியங்கள்! என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?

மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

Topics

பழந் தமிழகத்தின் அடையாளமே காவி எனும் ஆன்மிகம்தான்! – ஸ்டாலினுக்கு இந்து முன்னணி அறிவுரை!

பாரத நாட்டில் தமிழகத்தில் தான் அதிக கோவில்கள் உள்ளன. ஆன்மீகத்தோடு பின்னிப்பிணைந்த கலாச்சாரமும் பண்பாடும் தமிழகத்தில் இன்றுவரை போற்றப்பட்டு வருகிறது.

பஞ்சாங்கம் மே 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர் சேர்க்கை – விவரம்!

நேர்முகத்தேர்வு விவரங்களுக்கு கீழ்க்காணும் ~link 🔗~ஐ அழுத்தவும்

பெரியண்ணன் டிரம்ப்புக்கு… இந்திய தேசபக்தையின் கடிதம்!

ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.

வெளிவராத ரகசியங்கள்! என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?

மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

மாமன் பட வெளியீடு; மதுரையில் சூரியின் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மதுரை திருநகர் பகுதிகளில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 10 பேர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற

பஹல்காம்: இந்தியாவைப் பெருமைப் படுத்தும் மோடி!

பல இந்தியர்கள் தமது நலன் அறியாத அப்பாவிகளாக இருந்தாலும், பல சமயங்களில் சரியான வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடத் தெரியாமல் இருந்தாலும், அவர்களின் பூர்வ ஜென்ம பலன் மோடி காலத்தில் வேலை செய்கிறதோ?

‘சிங்காரவேலனே தேவா’ மூலம் நினைவில் நிற்கும் பாடலாசிரியர்!

திரைப்படப் பாடலாசிரியர் கு. மா. பாலசுப்பிரமணியம் (மே 13, 1920 – நவம்பர் 4, 1994)

Entertainment News

Popular Categories