விருத்தாசலத்தில் மகன், மகளை கொன்ற தாய் தற்கொலை..

விருத்தாச்சலத்தில் குடும்ப பிரச்னை காரணமாக மகன், மகளை கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ராமச்சந்திரன்பேட்டயைச் சேர்ந்தவர் செ.குமார் (51). கடலூர் சாலை அருகே இந்திராநகரில் சொந்தமாக லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவர் கரூரைச் சேர்ந்த சாஹிராபானுவை (40), காதலித்து திருமணம் செய்துள்ளார். 

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, இவர்கள் இந்திரா நகரில் உள்ள மகாலட்சுமி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  7 ஆம் வகுப்பு படிக்கும் மகன் பரத் (12), 5 ஆம் வகுப்பு படிக்கும் மகள்  ஹேமவர்ஷினி (10) ஆகியோர் உள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவில் வழக்கம்போல் அனைவரும் வீட்டில் தூங்கி உள்ளனர்.  குமார் வீட்டில் உள்ள ஹாலில் படுத்துள்ளார். சாஹிராபானு தனது இரண்டு குழந்தைகளுடன் அறைக்குள் படுத்து தூங்கி உள்ளனர்.  காலையில் குழந்தைகளை  பள்ளிக்கு அனுப்ப வெகு நேரமாகியும்,  கதவு திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று குமார் பார்த்துள்ளார். 

images 90 - 2026

அப்போது தாய், மகன், மகள் என மூவரும் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு,  கதறி அழுது உள்ளார்.  இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.  

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் மூன்று உடல்களையும்,  மீட்டு  விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மூன்று பேர் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டது.

இது குறித்து விருத்தாசலம் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் குமார் மற்றும் அவரது மனைவி சாஹிராபானுக்கு  இடையே, கடந்த மூன்று மாதமாக பிரச்னை இருந்து வந்ததாகவும்,  ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது இல்லை என கூறப்படுகிறது. 

மேலும், மூன்று மாதமாக   குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகவும், அதனால் மனமுடைந்த குமாரின் மனைவி சாஹிராபானு,  தனது மகன், மகளின் மூக்கில் பஞ்சு வைத்து அடைத்து,  மின்விசிறியில் தூக்கில் தொங்க விட்டதாகவும், அதன் பின்னர் சாஹிராபானுவும் மின்விசிறியில் தூக்கில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் இறந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories