சிதம்பரத்தில் பரபரப்பு.ஆட்சியர்‌ முன்னே தீக்குளிக்க முயன்ற ஓய்வு அதிகாரி..

IMG 20230308 WA0058 - 2026
சிதம்பரம் அருகே கூத்தன் கோயில் பகுதிக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த ஆட்சியர் பாலசுப்பிரமணியம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பந்தம்

மாவட்ட ஆட்சியர் கண் முன்பே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஓய்வு பெற்ற தாட்கோ துணை மேலாளரால் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பந்தம் இவர் தாட்கோவில் உதவி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன்கள், அருண்பிரசாத் மற்றும் பிரசாத், ஆகியோர் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 50 செண்ட் இடம் மற்றும் வீட்டுமனைகளை இவரிடம் இருந்து அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது .

மேலும் இது மட்டும் இன்றி அவரது பெயரில் இருந்த சொத்துக்களை ஸ்ரீமுஷ்ணம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் துணை வட்டாட்சியர் உதவியுடன் சம்பந்தத்தின் பெயரில் இருந்த சொத்துக்களை, அவரது இரு மகன்களும் அவர்கள் பெயரில் மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சம்பந்தம் சட்டவிரோதமாக தனது பெயரில் இருந்த சொத்துக்களை பெயர் மாற்றம் செய்வதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூன்று ஆண்டுகளாக கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிதம்பரம் உதவி ஆட்சியர் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் பெறும் அலுவலர் ஆகியோருக்கு மனுக்கள் அளித்தும், அந்த மனுக்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 27ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மனு மீதான விசாரணை கடந்த மார்ச்.6 தேதி நடைபெற்ற போது சம்பந்தம் ஆஜராகினார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு சென்ற சம்பந்தம் தன் தரப்பு நியாயங்களையும் ஆதாரங்களையும் எடுத்துக்காட்டிய பொழுது அதனை உதவி ஆட்சியர் பார்க்காமலும் கையால் தட்டி விட்டும் சார் ஆட்சியரின் உதவியாளர் சம்பந்தத்தை மனரீதியாக பாதிக்கும் அளவிற்கு கேளியும் கிண்டலும் செய்துள்ளதாக தெரிகிறது, பிறகு சார் ஆட்சியர் வெளியே போ என்று கூறியும் சம்பந்தத்தை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.

இந்நிலையில் சிதம்பரம் பகுதியில் கூத்தங்கோயில் பகுதியில் பணிகளை ஆய்வு மேற்கொள்ள புதன்கிழமை வருகை தந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியன் முன்பே சம்பந்தம் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஆட்சியரின் பாதுகாப்பு காவலர் மற்றும் உதவியாளர் ஆகியோர் பெட்ரோல் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை அப்புறப்படுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories