சிதம்பரத்தில் பரபரப்பு.ஆட்சியர்‌ முன்னே தீக்குளிக்க முயன்ற ஓய்வு அதிகாரி..

IMG 20230308 WA0058 - 2026
சிதம்பரம் அருகே கூத்தன் கோயில் பகுதிக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த ஆட்சியர் பாலசுப்பிரமணியம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பந்தம்

மாவட்ட ஆட்சியர் கண் முன்பே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஓய்வு பெற்ற தாட்கோ துணை மேலாளரால் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பந்தம் இவர் தாட்கோவில் உதவி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன்கள், அருண்பிரசாத் மற்றும் பிரசாத், ஆகியோர் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 50 செண்ட் இடம் மற்றும் வீட்டுமனைகளை இவரிடம் இருந்து அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது .

மேலும் இது மட்டும் இன்றி அவரது பெயரில் இருந்த சொத்துக்களை ஸ்ரீமுஷ்ணம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் துணை வட்டாட்சியர் உதவியுடன் சம்பந்தத்தின் பெயரில் இருந்த சொத்துக்களை, அவரது இரு மகன்களும் அவர்கள் பெயரில் மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சம்பந்தம் சட்டவிரோதமாக தனது பெயரில் இருந்த சொத்துக்களை பெயர் மாற்றம் செய்வதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூன்று ஆண்டுகளாக கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிதம்பரம் உதவி ஆட்சியர் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் பெறும் அலுவலர் ஆகியோருக்கு மனுக்கள் அளித்தும், அந்த மனுக்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 27ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மனு மீதான விசாரணை கடந்த மார்ச்.6 தேதி நடைபெற்ற போது சம்பந்தம் ஆஜராகினார்.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு சென்ற சம்பந்தம் தன் தரப்பு நியாயங்களையும் ஆதாரங்களையும் எடுத்துக்காட்டிய பொழுது அதனை உதவி ஆட்சியர் பார்க்காமலும் கையால் தட்டி விட்டும் சார் ஆட்சியரின் உதவியாளர் சம்பந்தத்தை மனரீதியாக பாதிக்கும் அளவிற்கு கேளியும் கிண்டலும் செய்துள்ளதாக தெரிகிறது, பிறகு சார் ஆட்சியர் வெளியே போ என்று கூறியும் சம்பந்தத்தை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.

இந்நிலையில் சிதம்பரம் பகுதியில் கூத்தங்கோயில் பகுதியில் பணிகளை ஆய்வு மேற்கொள்ள புதன்கிழமை வருகை தந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியன் முன்பே சம்பந்தம் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஆட்சியரின் பாதுகாப்பு காவலர் மற்றும் உதவியாளர் ஆகியோர் பெட்ரோல் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை அப்புறப்படுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories