December 5, 2025, 6:10 PM
26.7 C
Chennai

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள்; விஷமிகள் கலந்ததற்கான ஆதாரம் உள்ளது!: முதல்வர் உறுதி!

edappadi palanisamy - 2025

சென்னை : தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள், விஷமிகள் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர்களை மட்டும்தான் கைது செய்கிறோம்; பொதுமக்கள் யாரையும் கைது செய்யவில்லை” என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

திங்கள்கிழமை சட்ட மன்றத்தில் கேள்வி நேரம் முடிந்த பின் நடந்த விவாதத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி கலவரம், போராட்டக் களம், சமூகவிரோதிகள் கலந்தது, பொதுச் சொத்துகளை நாசம் செய்தது என்பவை குறித்து பேசினார்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக விரோதிகளோ விஷக் கிருமிகளோ அல்லது பயங்கரவாதிகளோ இல்லை. அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும். போலீசார் வீடு வீடாகச் சென்று சோதனையிடுவதை தடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமியும், இப்போராட்டம் தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார்.

இந்தக் கோரிக்கைகள், பேச்சுகளுக்கு பதிலளிக்கும் வகையில், சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி கலவரத்தில் யாரெல்லாம் உருட்டுக்கட்டையால் அடித்தனர்; பெட்ரோல் குண்டு வீசி கார்களுக்கு தீ வைத்தனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. பொதுமக்கள் தங்களுடைய உரிமைக்கு போராடுவதில் தவறு கிடையாது. இந்தியாவில் அதிக போராட்டம் நடைபெறும் மாநிலம் தமிழகம். அந்த அளவிற்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.

தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை மட்டுமே விஷமிகள் மற்றும் சமூக விரோதிகள் என்கிறோம். பொதுமக்களை அல்ல. வன்முறையாளர்களையும் சமூக விரோதிகளையும் எந்த அரசும் ஊக்கப்படுத்தக் கூடாது. எனவே வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்கின்றனர்.

தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர். போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் யாரையும் கைது செய்யவில்லை. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விவரங்களை தாராளமாக அளிக்கலாம். தவறு செய்தவர்கள் மீது விசாரணை முடிந்த பின் நீதிபதி பரிந்துரையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்… என்று பேசினார்.

முன்னதாக, நடிகர் கமலஹாசன் உள்ளிட்டோர், தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூகவிரோதிகள் என்றால் நானும் ஒரு சமூகவிரோதிதான் என்று கூறியிருந்தார். ஆனால், தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் எல்லோரையும் சமூக விரோதிகள் என்று எவரும் இதுவரை சொல்லவில்லை. போராட்டத்தில் சமூகவிரோதிகள் கலந்துவிட்டனர் என்றுதான் ரஜினி சொன்னார்.

ஆனால், கமல்ஹாசன் தானும் ஒரு சமூக விரோதிதான் என்று சொல்லிக் கொள்கிறார். போலீஸாரை தனிமைப் படுத்தி, கதறக் கதற கட்டையால் அடித்து, கல்லெறிந்து, தாக்குதல் தொடுத்தவர்கள், பொதுச் சொத்துகளை நாசப் படுத்தியவர்கள், ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பை தீவைத்து எரித்தவர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து அரசுக் கோப்புகளை தீயிட்டுக் கொளுத்தியவர்கள், ஆட்சியரகத்தை தாக்கி நாசப் படுத்தியவர்கள் இவர்கள் தான் சமூக விரோதிகள் என்று தெளிவாகக் குற்றம் சாட்டப் படும் போது, கமல்ஹாசனும் இந்த சமூகவிரோதச் செயல்களைச் செய்தாரா என்ற கேள்வி எழுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories