தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள்; விஷமிகள் கலந்ததற்கான ஆதாரம் உள்ளது!: முதல்வர் உறுதி!

edappadi palanisamy - 2026

சென்னை : தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள், விஷமிகள் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர்களை மட்டும்தான் கைது செய்கிறோம்; பொதுமக்கள் யாரையும் கைது செய்யவில்லை” என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

திங்கள்கிழமை சட்ட மன்றத்தில் கேள்வி நேரம் முடிந்த பின் நடந்த விவாதத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி கலவரம், போராட்டக் களம், சமூகவிரோதிகள் கலந்தது, பொதுச் சொத்துகளை நாசம் செய்தது என்பவை குறித்து பேசினார்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக விரோதிகளோ விஷக் கிருமிகளோ அல்லது பயங்கரவாதிகளோ இல்லை. அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும். போலீசார் வீடு வீடாகச் சென்று சோதனையிடுவதை தடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமியும், இப்போராட்டம் தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார்.

இந்தக் கோரிக்கைகள், பேச்சுகளுக்கு பதிலளிக்கும் வகையில், சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி கலவரத்தில் யாரெல்லாம் உருட்டுக்கட்டையால் அடித்தனர்; பெட்ரோல் குண்டு வீசி கார்களுக்கு தீ வைத்தனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. பொதுமக்கள் தங்களுடைய உரிமைக்கு போராடுவதில் தவறு கிடையாது. இந்தியாவில் அதிக போராட்டம் நடைபெறும் மாநிலம் தமிழகம். அந்த அளவிற்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை மட்டுமே விஷமிகள் மற்றும் சமூக விரோதிகள் என்கிறோம். பொதுமக்களை அல்ல. வன்முறையாளர்களையும் சமூக விரோதிகளையும் எந்த அரசும் ஊக்கப்படுத்தக் கூடாது. எனவே வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்கின்றனர்.

தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர். போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் யாரையும் கைது செய்யவில்லை. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விவரங்களை தாராளமாக அளிக்கலாம். தவறு செய்தவர்கள் மீது விசாரணை முடிந்த பின் நீதிபதி பரிந்துரையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்… என்று பேசினார்.

முன்னதாக, நடிகர் கமலஹாசன் உள்ளிட்டோர், தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூகவிரோதிகள் என்றால் நானும் ஒரு சமூகவிரோதிதான் என்று கூறியிருந்தார். ஆனால், தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் எல்லோரையும் சமூக விரோதிகள் என்று எவரும் இதுவரை சொல்லவில்லை. போராட்டத்தில் சமூகவிரோதிகள் கலந்துவிட்டனர் என்றுதான் ரஜினி சொன்னார்.

ஆனால், கமல்ஹாசன் தானும் ஒரு சமூக விரோதிதான் என்று சொல்லிக் கொள்கிறார். போலீஸாரை தனிமைப் படுத்தி, கதறக் கதற கட்டையால் அடித்து, கல்லெறிந்து, தாக்குதல் தொடுத்தவர்கள், பொதுச் சொத்துகளை நாசப் படுத்தியவர்கள், ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பை தீவைத்து எரித்தவர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து அரசுக் கோப்புகளை தீயிட்டுக் கொளுத்தியவர்கள், ஆட்சியரகத்தை தாக்கி நாசப் படுத்தியவர்கள் இவர்கள் தான் சமூக விரோதிகள் என்று தெளிவாகக் குற்றம் சாட்டப் படும் போது, கமல்ஹாசனும் இந்த சமூகவிரோதச் செயல்களைச் செய்தாரா என்ற கேள்வி எழுகிறது!

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories