ரமணா சினிமா பாணியில்… செத்தவர் உடலுக்கு சிகிச்சை! தனியாரின் அவலத்தை அம்பலப் படுத்திய அரசு டாக்டர்!

kg hospital thanjavur 1 - 2026

ரமணா சினிமாவின் பாணியில், இறந்து மூன்று நாட்கள் ஆன உடலுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி, இரண்டரை லட்ச ரூபாய் பணம் கேட்ட கேஜி தனியார் மருத்துவமனையின் செயலை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் ஈசனூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் (வயது 55) அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர். வயிற்று வலியால் துடித்த சேகர், நாகை.,யில் உள்ள டாக்டர் சந்திரசேகரிடம் தன் உடல் நலம் குறித்துக் கூறி சிகிச்சைக்கு அணுகியுள்ளார்.

அவரை பரிசோதித்த டாக்டர் சந்திரசேகர், குடல் இறங்கி உள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளார். பின்னர் திடீரென மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் டாக்டர் செந்தில்குமார் என்பவர் நடத்தும் கே.ஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அவரை அங்கே அனுப்பியுள்ளார்.

கடந்த 11ஆம் தேதி தஞ்சை கேஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேகருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வந்துள்ளது. சிகிச்சை செலவாக ரூ. ஐந்தரை லட்சத்தை அவரது குடும்பத்தினர் செலுத்தியுள்ளனர். இருப்பினும் உடல் நலம் தேறாமல் அவர் அவதிப்பட்டுள்ளார்.

ALSO READ:  மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இந்நிலையில், மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்தால் பூரணமாக குணமடைந்து விடுவார் என வியாழக்கிழமை மதியம் கேஜி மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

சேகர் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு 17 நாட்கள் ஆன நிலையில், லட்சக்கணக்கில் பணம் செலவு செய்தும் குணமாகாத நிலையில் சேகர் குடும்பத்தினர் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். தங்களிடம் பணம் இல்லை என்றும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யுமாறும் சேகரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இருப்பினும் சேகரை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்து அனுப்பாமல், இழுத்தடித்த கேஜி மருத்துவமனை நிர்வாகம், வெள்ளிக்கிழமை பிற்பகல் மருத்துவ உபகரணங்களுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பியது.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், சேகரை பரிசோதித்த போது அதிர்ந்து போயினர். சேகர் உயிரிழந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது தெரியவந்தது. இதனால்தான் கேஜி மருத்துவமனை நிர்வாகம் உடனே டிஸ்சார்ஜ் செய்யாமல் காலம் தாழ்த்தி அனுப்பி வைத்த ரகசியம் தெரியவந்தது.

அரசு மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போன சேகரின் குடும்பத்தினர், உடனே கேஜி மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டனர். ரமணா படத்தில் வருவது போல், இறந்த உடலுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக புகார் கூறினர். ஆனால், கேஜி., மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் செந்தில்குமாரின் சக மருத்துவர்களோ, உரிய பதில் ஏதும் கூறாமல் திருப்பி அனுப்பியுள்ளானராம்! இதை அடுத்து கேஜி மருத்துவமனை செய்த பெரும் தவறையும் மோசடியையும் சேகரின் மகன் சுபாஷ் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

ALSO READ:  அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

ரமணா பட பாணியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தஞ்சையை மட்டுமல்ல, தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories