December 5, 2025, 10:12 PM
26.6 C
Chennai

19 ஆண்டுகளுக்கு பின் கொல்லம்- எழும்பூர் இடையே மீண்டும் தினசரி ரயில் சேவை: பயணிகள் மகிழ்ச்சி!

1551799208804 e1551804391635 - 202519 ஆண்டுகளுக்கு பிறகு கொல்லம்-  சென்னை எழும்பூர் இடையே  தினசரி  ரயில் சேவை இன்று  தொடங்கியது.  செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு இன்று மாலை வந்த இந்த ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

IMG 20190305 224321 - 2025சென்னை – கொல்லம் இடையே பாரம்பரிய ரயில் சேவையான கொல்லம் மெயில் கடந்த 1904-ஆம் ஆண்டு முதல் இயங்கியது.  இதன் பின் மீட்டர் கேஜ் பாதையான இதனை அகலப்பாதையாக்கும் பணிக்காக கடந்த 2000-ஆம் ஆண்டில் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே  தினசரி ரயில் சேவை தொடங்கியுள்ளது.
IMG 20190305 224450 - 2025இந்த ரயில் சேவையை  ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தருமபுரியில் இருந்து காணொளிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நேற்று மாலை 4.45 மணிக்கு புறப்பட்டது.
இந்த ரயிலில்  இன்று அதிகாலை 5.10க்கு செங்கோட்டை வந்தது. பின்னர் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டு காலை 9 மணிக்கு கொல்லம் சென்றடைந்தது.
IMG 20190305 205124 - 2025இதே போல கொல்லத்தில்  முற்பகல் 11.45 மணிக்கு புறப்பட்டது.
பயணிகள் உற்சாகமாக பயணத்தை மேற்கொண்டனர். இந்த ரயில் மாலை 3.10 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்த ரயிலுக்கு செங்கோட்டை வர்த்தக சங்கத் தலைவர் ரஹீம் மற்றும் பயணிகள் நலச் சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனை தொடர்ந்து, அவர்கள் ரயில் டிரைவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ரயில் பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
1551799184209 e1551804535199 - 2025இந்த ரெயிலில் மூன்றடுக்கு ஏ.சி. வசதி பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் 8, 2 பொது பெட்டிகள்,2 கார்டு பெட்டிகளோடு மாற்றுத்திறனாளி பெட்டிகள்  என மொத்தம் 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
IMG 20190305 205303 e1551804560554 - 2025ஏற்கனவே செங்கோட்டையில் இருந்து தினசரி சென்னைக்கு பொதிகை எக்ஸ் பிரஸ், மற்றும் வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சென்னைக்கு சென்று வருகின்றன.தற்போது புதியதாக கூடுதலாக இந்த ரயில் கிடைத்துள்ளது.
Screenshot 20190305 183627 e1551804593727 - 2025இதனைத் தொடர்ந்து இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து சென்னை புறப்பட்டுச் சென்றது. சென்னை- கொல்லம் இரு மார்க்கமாக இயக்கப்படும் இந்த ரயில் தமிழக-கேரள மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பேருதவியாக இருக்கும் என பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories