உஷார்! மினரல் வாட்டரா குடிக்கிறீங்க? கூடவே பிளாஸ்டிக் துகள்களும் உள்ளே போகுதாம்!

Published:

 

water bottles - 2026

முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் பாட்டில் தண்ணீரில் பிளாஸ்டிக் துகள் இருக்கிறது என்று ஆராய்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.  இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட 9 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக 250 வாட்டர் பாட்டில்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவை வெளியிட்டது அமெரிக்காவின் ஆர்ப் மீடியா அமைப்பு. இதில், முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, பிரேசில், இந்தோனேஷியா உள்ளிட்ட 9 நாடுகளில் உலகின் முன்னணி பிராண்ட் குடிநீர் பாட்டில்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்காவின் ஆர்ப் மீடியா அமைப்பு வெளியிட்டுள்ள இந்த ஆய்வின் முடிவில், 9 நாடுகளில் 19 இடங்களில் இருந்து 11 நிறுவனங்களைச் சேர்ந்த 250 குடிநீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டன.

இதில், ஒவ்வொரு லிட்டர் தண்ணீரிலும் 325 பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன. பரிசோதிக்கப்பட்ட 250 பாட்டில்களில் 17ல் மட்டுமே பிளாஸ்டிக் துகள்கள் இல்லாமல் இருந்தன. மற்றவற்றில் 90 சதவீதம் வரை பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. இந்த பிளாஸ்டிக் துகள்கள், அந்த பாட்டிலின் மூடிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் துகள்களாம்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

இவை குடிநீருடன் உள்ளே சென்றால், உடல் பிளாஸ்டிக் கழிவுகளைச் சுமக்கும் குப்பைத்தொட்டி ஆகி, அதனால் உடல் நல பாதிப்பு ஏற்படுமாம்!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img