மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்த்ரயான்-2 பயணம் திடீர் ஒத்திவைப்பு!

Published:

chandrayaan2 - 2026

நாடு ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சந்திரயான்-2 பயணம் திடீரென ஒத்திவைக்கப் பட்டது. விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் சந்திரயான்-2 கவுன்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது.

க்ரையோஜினிக் எஞ்சினுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவுபெற்ற நிலையில், திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவப்படுதல் ஒத்திவைக்கப் படுவதாக கூறப்பட்டது.

chandrayaan2a - 2026சந்திரயான்2-ஐ விண்ணில் செலுத்த நேற்று காலை 6.51 மணிக்கு கவுன்டவுன் தொடங்கியது! 20 மணிநேர கவுன்டவுன் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் திடீரென நிறுத்தப் பட்டதாக தகவல் அளிக்கப் பட்டது.

சந்திரயான் 2-ஐ தாங்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 எம்.1 ராக்கெட் ஏவும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப் படுவதாகவும், சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்தது.

சந்திரயான் 2 தற்காலிக நிறுத்தம் குறித்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்ணில் ஏவும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக, இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Related articles

Recent articles

spot_img