December 6, 2025, 9:37 AM
26.8 C
Chennai

வரலாற்றின் பக்கங்களில்: அக்பருக்கு உயிர்ப் பிச்சை அளித்த மாதரசி

akbar kirandevi portrait - 2025

இது திரிபுபடாத வரலாறு. திரித்து எழுதப்படாத உண்மைச் சம்பவம். ஓர் ஆணவக் காரானின் வாழ்க்கைப் பின்னணியைக் கூறும் வரலாற்று ஆவணம்.

மொகலாய மன்னர் அக்பர் குறித்து பள்ளிப் பாடங்களில் படித்தது நமக்கெல்லாம் நினைவிருக்கும். அவரின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்றெல்லாம் படித்தது நம் நினைவுக்கு வருகிறது. ஆனால், ஆனால் அக்பர் என்ற சராசரிக்கும் கீழான ஒரு மன்னனின் பின்னணியையும் தெரிந்து கொள்ளாதது நமது தவறு. சொல்லாதது அடிமை வரலாற்றாளர்கள் இம்மண்ணுக்குச் செய்துவரும் துரோகம்.

அக்பர் ஒவ்வொரு வருடமும் நவ்ரோஜ் மேளா (Nauroj Mela) என்றொரு விழா நடத்துவது வழக்கம். அந்த விழாவில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஆனால் இந்த விழாவில் கலந்து கொள்வது அக்பருக்கு மிகவும் பிடித்த ஒன்று! ஆனால், தான் ஆண் என்பதால் எப்படி அதில் கலந்து கொள்வது? எனவே அக்பர் பெண் வேடமிட்டு அதில் கலந்துகொள்வாராம்.

வெறுமனே விழாவில் கலந்து கொள்வது ஒன்றும் அக்பரின் நோக்கமில்லையே! அவரின் உள்நோக்கமே, கண்ணில் அகப்படும் அழகான பெண்களை தனது பெண் வேலையாட்கள் மூலம் மனதை மயக்கும் வகையில் பேசி, தன்னிடம் அழைத்து வருவதுதான்! அவ்வாறு அழைத்து வருவது ஏன் … எதற்கு என்ற விளக்கம் சொல்லவும் வேண்டுமோ? அக்பருக்கு மனைவியர் பலர் இருந்தனர் என்கிறது வரலாறு. இருதாலும், பெண் பித்தராக இருந்ததை சில சம்பவங்கள் காட்டிக் கொடுத்து, வரலாற்றில் பதிய வைத்துள்ளன.

அப்படி ஒரு முறை நவ்ரோஜ் மேளா நடந்தபோது மஹாராணா பிரதாப்பின் தம்பி ஷக்தி சிங்கின் மகளும் பிக்கானேர் அரசர் பிருத்வி ராஜின் மனைவியுமான பைசா கிரண்தேவி (Baaisa Kirandevi) அந்த விழாவுக்கு அழைத்துவரப் பட்டுள்ளார். வழக்கம் போல் பெண் வேடமிட்டுச் சென்ற அக்பர், கிரண் தேவியின் அழகில் கிறங்கினார். அவரை ஜனானா மஹாலுக்கு தந்திரமாக வரவழைத்துள்ளார்.
பின்னர் அக்பர் கிரண் தேவியைத் தொட முயன்றபோது, கிரண் தேவி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி அக்பரை தாக்கி கீழே தள்ளினார். அக்பரின் நெஞ்சில் கால் வைத்து, கத்தியை கழுத்தில் வைத்துள்ளார். கீழ்த் தரமானவனே உன் கடைசி ஆசை என்ன என்று கேட்கிறார். அப்போது அக்பர் “தேவி நீங்கள் யாரென்று தெரியாமல் தவறு செய்துவிட்டேன் … என்னை மன்னியுங்கள்” என்று கதறியிருக்கிறார்.

கிரண் தேவி அப்போது ஆணையிடுகிறார் … ”இனி எக்காலத்திலும் இதுபோன்ற நவ்ரோஜ் மேளா நடத்தக்கூடாது” என்று! அவரின் மிரட்டலுக்கு ஒப்புக் கொண்ட அக்பர், அதன்பின் மேளா நடத்தவுமில்லை. உயிர்ப்பிச்சை அளித்த கிரண் தேவிக்கு நன்றி சொல்லி தப்பிக்கிறார்.

இந்த வரலாற்றுத் தகவல், கிரிதர் அஸியாவின் புத்தகம் ஸகத் ரஸோ (பக்கம் 632)ல் இடம் பெற்றிருக்கிறது.

இந்த வரலாற்று ஆவண ஓவியம் பிக்கானேர் அருங்காட்சியகத்தில் “உயிர் பிச்சை கேட்கும் அக்பரின் நெஞ்சின் மேல் கால் வைத்து … கத்தியோடு நிற்கும் கிரண்தேவி” என்ற தகவலுடன் ஒரு வரலாற்றுச் சம்பவத்தைத் தாங்கிக் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories