விளம்பரம்… வளரும் குழந்தைகளிடம் மூட நம்பிக்கையை வளர்க்கலாமா?

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

false-hope-in-children

வளரும் பிள்ளைகளிடம் மூடநம்பிக்கையை வளர்க்கலாமா விளம்பரம்?

“முகம் காட்டினால் போதுமே நல்லது நடக்குமே” என்ற பின்னணிப் பாடலோடு விளம்பரம் தொடங்குகிறது.

ஒரு சிறுமி “மெம்மீ! மெம்மீ!” என்று அழைத்துக் கொண்டே வருகின்றாள்.

“இன்றைக்கு என்ன?” என்று கேட்கிறாள் அந்த மம்மி.

“இன்று எங்களுக்கு மியூசிக் காம்பெடிஷன். உங்கள் முகம் எங்களுக்கு ரொம்ப லக்கீ!” என்கிறாள் சிறுமி.

அதோடு அவள் தன் நண்பர் கூட்டத்தையும் அழைத்து வருகிறாள். தன் தாயின் முகத்தைப் பார்த்த பின் போட்டிக்குச் சென்றால் வென்றுவிடலாம் என்று ஒரு எண்ணத்தை அவர்களிடமும் விதைக்கிறாள்.

இதுபோன்ற விளம்பரங்களால் வளரும் தலைமுறை போட்டிக்குத் தயாராகாமலே ஒரு பெண்ணின் முகத்தைப் பார்க்கும் அதிர்ஷ்டத்தால் வென்றுவிடலாம் என்று எண்ண மாட்டார்களா?

இதைப் பற்றிய சமூக ஆர்வலர்கள் ஏன் வாய் திறப்பதில்லை? இந்த விளம்பரத்தைத் தடை செய்ய வேண்டாமா? குளியல் சோப்பை விற்பதற்கு இதைவிட வேறு நல்ல ஆலோசனை அவர்களுக்கு எழவில்லையா? குழந்தைகளை ஏமாற்றித்தான் பிழைக்க வேண்டுமா?

ALSO READ:  குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

Related articles

Recent articles

spot_img