சுபாஷிதம்: ஏட்டுக்கல்வி!

subhashitam-5
subhashitam-5

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

67. ஏட்டுக்கல்வி!

ஸ்லோகம்:

புஸ்தகஸ்தா து யா  வித்யா பரஹஸ்தேஷு யத்தனம் |
கார்யகாலே சமாயாதே ந ஸா வித்யா ந தத்தனம் ||
— சாணக்கிய நீதி 

பொருள்:

புத்தகத்தில் இருக்கும் கல்வியும் பிறர் கையில் இருக்கும் செல்வமும் தேவையானபோது உதவாது. அப்படிப்பட்ட கல்வி கல்வியல்ல. செல்வம் செல்வமல்ல.

விளக்கம்: 

விஞ்ஞானம் நூலில் இருந்தால் போதாது. தலையில் இருக்க வேண்டும். கற்ற கல்வியை நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வீண் என்று கூறும் சுலோகம் இது.

இந்தியர்களுக்கு கீர்த்தி பெற்றுத் தந்த விஷயங்களில் ‘தாரணா சக்தி’ எனப்படும் நினைவில் நிறுத்தும் திறன் முதன்மையானது. இதன் முக்கியத்துவத்தை போதிக்கும் ஸ்லோகம் இது.

புத்தகங்கள் இல்லாத காலத்திலிருந்தே வேத விஞ்ஞானம் பல தலைமுறைகளாக அளிக்கப்பட்டு வருகிறது. வேத சம்ஹிதைகளை  சரமாரியாக ஒப்புவிக்கும் அறிஞர்கள் வாழும் பூமி பாரத தேசம். சிறு வயது முதலே அப்யாசம் செய்தால் ஞாபக சக்தி வளரும்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

அறியாமையை விட புத்தகம் பார்த்து படிப்பது மேல். அவர்களை விட மனப்பாடம் செய்து ஒப்பிப்பது மேல். அவர்களை விட பொருள் புரிந்து கொண்ட அறிஞர்கள் மேல். அப்படிப்பட்ட அறிஞர்களை விட நடைமுறையில் கடைப்பிடிக்கும் சான்றோர் மேல் என்று மனு குறிப்பிடுகிறார்.

வெறும் ஏட்டுக்கல்வி போதாது. சரியான நேரத்தில் நினைவுக்கு வராத அறிவு, புத்தகத்தில் இருக்கும் கல்வி, பிறர் கையில் இருக்கும் நம் செல்வம் போன்றது. நம் பணம் பிறர் கையில் இருந்தால் என்ன பலன்? நம் தேவையை நிறைவேற்ற உதவாது அல்லவா? 

ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட நூலை முழுவதும் மனப்பாடம் செய்வது என்பது முற்காலத்தில் இருந்த ஒரு பயிற்சி. அந்தப் படிப்பு முழுமை அடைந்த பின் விந்தையான தேர்வு வைப்பார்கள். அதற்கு ‘சலாக பரீக்ஷை’  என்று பெயர். புத்தகத்தில் ஊசி போன்ற ஒரு கருவியை  நுழைப்பார்கள். அது  எந்த பக்கம் வருகிறதோ அதில் உள்ள செய்தியை மாணவன் விவரிக்க வேண்டும். அதாவது புத்தகம் முழுவதும் மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும். 

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

கற்றுக் கொண்டதை நினைவுகூர்வது, பொருள் புரிந்து கொள்வது, கடைபிடிப்பது இவையே உண்மையான கல்வி. வெறும் புத்தகங்களை சேமிப்பது அல்ல!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories