December 5, 2025, 5:48 PM
27.9 C
Chennai

சுபாஷிதம்: கௌரவம் அளிக்கும் ஐந்து குணங்கள்!

subhashitam 1 3 - 2025

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

88. கௌரவம் அளிக்கும் ஐந்து  குணங்கள்! 

ஸ்லோகம்:

வித்தம் பந்துர்வய: கர்ம வித்யா பவதி பஞ்சமம் |
ஏதானி மான்யஸ்தானானி கரீயோ யத்யதுத்தரம் ||
– மனுஸ்மிருதி.

பொருள்: 

மனிதனுக்கு கௌரவம் அளிக்கும் விஷயங்கள் ஐந்து. செல்வம், வம்ச பாரம்பரியம், வயது, நற்செயல், அறிவுத்திறன். இவை வரிசைக் கிரமத்தில் ஒன்றைவிட அடுத்தது உயர்ந்தது.

விளக்கம்:

ஒரு மனிதனுக்கு சமுதாயத்தில் உயர்ந்த  மதிப்பான இடத்தை அளிக்கக் கூடியவை ஐந்து குணங்கள். இங்ஙனம்  கௌரவம் பெறுவதற்கான காரணங்களில் கல்வி அறிவுக்கு முதலிடம் அளிக்கிறார் கவி.

கல்வி, நற்செயல்கள், வயது, சிறந்த வம்சத்தில் பிறப்பது, செல்வம்… இந்த ஐந்தில் எதன் மூலம் வரும் புகழ் நிலையானது? 

மனிதனுக்கு செல்வத்தினால் சமூகத்தில் மதிப்பு கிடைப்பது போல் தோன்றும். அது நிலையற்றது. செல்வம் போனால் கௌரவமும் போய்விடும். செல்வம் இருந்தும் தானம் செய்யும் குணம் இல்லாவிட்டால் அது பயனற்றது.

உறவினர் என்பதால் நாம் ஒருவருக்கு அளிக்கும் மதிப்பு கூட  நிலையற்றதே. நல்லுறவு விரிசல் கண்டால் அந்த கௌரவமும் போய்விடும். சிறந்த வம்சத்தில்  பிறந்ததால் வரும் கௌரவம் கூட சாஸ்வதம் அல்ல. மனிதனின் நடத்தை சீர்கெட்டால் வம்ச கௌரவமும் பாழாகிவிடும். வயதினால் வரும் மதிப்பு கூட அதிக நாள் நிற்காது. முதிர்ந்த வயதில் நோய்கள் பாதித்தால் புத்தி பேதலித்து விட்டது என்று நினைப்பார்கள். முதியோர் பேச்சுக்கு மதிப்பிருக்காது.

மனிதன் செய்யும் நற்செயலால் கௌரவம் வருகிறது. அதனைச் சிறிது சிறிதாக சமுதாயம் மறந்துபோகும் வாய்ப்பும் இல்லாமல் இல்லை. 

இனி, இன்றியமையாதது மனிதனின் கல்வி அறிவு, புத்தி கூர்மை, நுண்ணறிவு, ஞானம் ஆகிய வித்யையால்  வரும் கௌரவம். இந்த கௌரவம் பிற அனைத்தையும் விட சிறப்பானது. நிலையானது. உறவுகள் மட்டுமல்ல உலகமே போற்றும்.  மீதி உள்ள நான்கு குணங்கள் இருந்த போதிலும் வித்யை இல்லாவிட்டால் உயர்வு கிட்டாது. அதனால் ஒவ்வொருவரும் கல்வி கற்ற அறிவாளனாக வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories