பைக்கில் காதலனுடன் சென்று… ஆத்திரம் தீர கத்தியால் குத்திக் கொன்ற இளம்பெண்!

andhra-lady-murdered-her-lover
andhra-lady-murdered-her-lover

பெண் பலவந்தப் படுத்தியதால் தாலி கட்டினான். அனைவர் முன்பும் திருமணத்திற்கு நிராகரித்தான் வேதனை அடைந்த பெண் காதலனை கத்தியால் குத்தி கொன்றாள்.

காதலிப்பதாக கூறி பின்தொடர்ந்தான்… யாருக்கும் தெரியாமல் திருட்டுத் தாலி கட்டினான். பகிரங்கமாக திருமணத்திற்கு நிராகரித்தான். மேலும் அவள் மீது சந்தேகப்பட்டு காதலியை வேதனைக்கு உள்ளாக்கினான். சோஷியல் மீடியாவில் தவறாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினான். இந்த வேதனையையும் அவமானத்தையும் தாங்க இயலாமல் சமயம் பார்த்து இளம்பெண் அவனை கத்தியால் குத்திக் கொன்றாள்.

இந்த சம்பவம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் திங்கள் இரவு நடந்தது. தாள்ளபூடி மண்டலம் மலகபல்லி கிராமத்தை சேர்ந்த கர்சிகூடி பாவனி என்ற பெண் கொவ்வூரு ஏபிஎன் அண்ட் பிஆர்ஆர் கல்லூரியில் டிகிரி படித்து வருகிறாள். அப்பெண் இன்டர் படித்து வந்த சமயத்தில் அம்படி கருணதாதாஜி நாயுடு என்ற இளைஞன் காதல் என்று சொல்லி அவளை வலையில் வீழ்த்தினான். சில மாதங்கள் இருவரும் நெருக்கமானார்கள்.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆனால் திருமணப் பேச்சை எடுத்தாலே இருவரின் குலமும் வேறு என்று அவன் திருமணத்திற்கு மறுத்தான். இருப்பினும் இளம்பெண் அழுத்தம் கொடுத்ததால் திருட்டுத் தாலி கட்டினான். சில காலம் இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனால் அனைவர் முன்பும் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பாவனி கேட்டபோது முடியவே முடியாது என்று மறுத்துவிட்டான்.

அதுமட்டுமன்றி பாவனி மீது சந்தேகப்பட்டு சோஷல் மீடியாவில் அவளைப் பற்றிய தீய பிரச்சாரம் செய்யத் தொடங்கினான். அவனுடைய கொடுமைகள் தாங்காமல் இளம்பெண் தன் சொந்த கிராமமான மலகபல்லிக்கு வந்துவிட்டாள்.

திங்களன்று அவளுக்கு போன் செய்து உன்னோடு பேசவேண்டும் என்று கூறி ஐ. பிங்கடி ஜங்ஷனுக்கு வரும்படி தாதாஜி நாயுடு அவளிடம் கூறினான். அதனால் பாவனி அங்கு சென்றாள். அதன் பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நேர்ந்தது. தன்னை வீட்டுக்கு அருகில் கொண்டு விட்டுவிட வேண்டும் என்று அவள் கேட்டுக் கொண்டதால் மோட்டார் சைக்கிள் மீது இருவரும் கிளம்பினார்கள்.

ஆனால் அவனுடைய நடவடிக்கையில் மிகவும் மன வேதனைக்கு உள்ளான அவள் அவனை கொன்று விட வேண்டுமென்று தீர்மானித்தாள். அதற்குமுன் ஆன்லைனில் வாங்கிய கத்தியால் அவனை குத்தத் தொடங்கினாள். தர்மவரம் கிராம எல்லை வந்தவுடன் தாதாஜி நாயுடுவின் கழுத்தில் ஒரே குத்து. அதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து அவன் கீழே விழுந்தான்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

அப்படியும் கீழே விழுந்து அவனை மீண்டும் பல இடங்களில் கத்தியால் ஆத்திரம் தீர குத்தினாள். சம்பவ இடத்திலேயே அவன் மரணமடைந்தான். அதன்பின் பாவனி போலீசாருக்கு போன் செய்து செய்தி தெரிவித்து சரணடைந்தாள். ரூரல் எஸ்ஐ கே.ராமகிருஷ்ணா சம்பவ இடத்துக்கு வந்து விவரங்களை சேகரித்து விசாரணையைத் தொடங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories