December 5, 2025, 2:41 PM
26.9 C
Chennai

சுபாஷிதம்: நேரமில்லை என்பதற்காக… இதை விடலாமா?

subhashitam 1 3 - 2025

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

90. முன்னுரிமை எதற்கு?

ஸ்லோகம்:

சதம் விஹாய போக்தவ்யம் சஹஸ்ரம் ஸ்நானமாசரேத் !
லக்ஷம் விஹாய தாதவ்யம் கோடிம் த்யக்த்வா ஹரிம் பஜேத் !!
– ஆரிய தர்மம்

பொருள்:

நூறு வேலைகள் இருந்தாலும் நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். ஆயிரம் வேலைகள் இருந்தாலும் நேரத்திற்கு குளிக்க வேண்டும். லட்சம் செலவுகள் இருந்தாலும் தான தர்மத்திற்கு பணம் ஒதுக்க வேண்டும். கோடிக்கணக்கான வேலைகள் இருந்தாலும் கடவுளை வணங்குவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

விளக்கம்: 

வேலைகளில் அழுத்தம் அதிகமாகி நம் முன்னுரிமைகள் தாறுமாறாகும் இந்த நாட்களில் அனைவருக்கும் உபயோகப்படும் இந்த சுலோகம் சிந்திக்க வைக்கிறது. இதன் கருத்து முன்னுரிமைகளின் மீது கவனம் கொள் என்று எச்சரிக்கை செய்கிறது.

எந்தப் பணியில் இருப்பவர் ஆனாலும் தலைமுழுகிப் போகும் வேலையில்  இருந்தால், அசட்டை செய்வது உணவைத்தான். நேரம் கிடைக்காமல் பசியை அடக்கிக் கொள்பவர்களிடம் இந்த ஸ்லோகம் நூறு வேலைகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நேரத்துக்கு சாப்பிடு என்கிறது.

பசியோடு வேலை செய்தால் அதில் கவனக்குறைவு ஏற்படும். ஆர்வம் குறையும். பொறுமை இழப்போம். சரியான நேரத்திற்கு உணவு ஏற்காவிடில் உடல் நலம் கெடும். அதனால் நூறு வேலைகளை நிறுத்திவிட்டாவது நேரத்திற்கு சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்குக் கூட கொடுத்து வைக்காவிட்டால் அந்த செல்வம் எதற்காக?

சுலோகத்தின் இரண்டாவது முன்னுரிமை குளிப்பதற்கு அளிக்கப்பட்டுள்ளது. குளிப்பது என்றால் சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம். ஆயிரம் வேலைகள் இருந்தாலும் காலையிலேயே குளித்து விட வேண்டும். அடுத்தது தானம் பற்றி கூறுகிறார். லட்சம் செலவுகள் இருந்தாலும் தானம் செய்வதற்கு பணம் எடுத்து வைத்து விடவேண்டும்.

இந்தப் பிறவியில் நாம் வயிறு நிறைய சாப்பிடுகிறோம் என்றால் முற்பிறவிகளில் நாம் தானம் செய்ததால்தான் என்கிறது சாஸ்திரம். இறுதியாக கோடி வேலைகள் இருந்தாலும் கடவுளை வணங்க வேண்டும் என்கிறது சுலோகம்.

வேலை இருக்கிறது என்று கூறி இறைவழிபாட்டை ஒதுக்கி விடக் கூடாது. கடவுளுக்கு நன்றி செலுத்தும் பண்பு தினசரிக் கடமையாக வேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories