February 21, 2026, 5:42 PM
29 C
Chennai

சுபாஷிதம்: பூவிதழ் போல் மென்மை… கல் போல் கடினம்!

subhashitam_1-5
subhashitam_1-5

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

95. பூவிதழ் போல் மென்மை… கல்போல் கடினம்!

ஸ்லோகம்:

சம்பத்சு மஹதாம் சித்தம் பவேதுத்பல கோமலம் !
ஆபத்சு ச மஹாசைல சிலாசங்காத கர்கசம் !!
– பர்த்ருஹரி (நீதி 56) 

பொருள்: 

பெருஞ்செல்வம் சேர்ந்த போது சான்றோர்கள் மனம் பூவிதழ் போல் மென்மையாக இருக்கும். (பிறர் துன்பம் கண்டு கருணையால் நெஞ்சில் ஈரம் கொண்டு உதவுவார்கள்). ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தைரியத்தோடு மலைபோல் திடமாக நின்று பொறுமையோடு அந்தத் துயரை தாங்கிக் கொள்வார்கள்.

விளக்கம்:

ஒரு மனிதன் துயர் வந்த போதும் செல்வம் சேர்ந்த போதும் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதைப் பொருத்து அவனுடைய நடத்தை, குணம் போன்றவற்றை கணக்கிட்டு விடலாம். மனிதனின் ஆளுமைக்கு இது ஒரு உரைகல்.

சான்றோர் துன்பத்திலும் இன்பத்திலும் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்து இயம்பும் பர்த்ருஹரி சுபாஷிதம் இது.

தன் செல்வத்தைப் பிறருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று விரும்பி,  அவர்களின் துயர் நீக்க முன்வருபவரே  சான்றோர். அத்தகைய மென்மையான இயல்பு கொண்டவர் தமக்கு ஏதாவது துன்பம் நேரும் போது துவண்டு விடாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வர். அப்படிப்பட்ட மகனீயர்களே உலகை உய்விக்க கூடியவர்.

மிருதுவான தாமரை, சேறில் இருந்து மேலெழுகிறது… மலர்கிறது… அனைவருக்கும் ஆனந்தத்தைப் பகிர்கிறது. தேன் வண்டுகளுக்கு அடைக்கலம் அளிக்கிறது… உணவளிக்கிறது.

எத்தகைய புயல் வீசினாலும் மலை  கலங்காமல் அசையாமல் நிற்கும். அதுபோன்றவர்கள் மகனீயர்கள். விடுதலைப் போரில் பங்கேற்ற பிரகாசம் பந்துலு போன்ற தலைவர்கள் இந்த சுலோகத்துக்கு உதாரணமாக  நின்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories