சுபாஷிதம்: பூவிதழ் போல் மென்மை… கல் போல் கடினம்!

subhashitam_1-5
subhashitam_1-5

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

95. பூவிதழ் போல் மென்மை… கல்போல் கடினம்!

ஸ்லோகம்:

சம்பத்சு மஹதாம் சித்தம் பவேதுத்பல கோமலம் !
ஆபத்சு ச மஹாசைல சிலாசங்காத கர்கசம் !!
– பர்த்ருஹரி (நீதி 56) 

பொருள்: 

பெருஞ்செல்வம் சேர்ந்த போது சான்றோர்கள் மனம் பூவிதழ் போல் மென்மையாக இருக்கும். (பிறர் துன்பம் கண்டு கருணையால் நெஞ்சில் ஈரம் கொண்டு உதவுவார்கள்). ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தைரியத்தோடு மலைபோல் திடமாக நின்று பொறுமையோடு அந்தத் துயரை தாங்கிக் கொள்வார்கள்.

விளக்கம்:

ஒரு மனிதன் துயர் வந்த போதும் செல்வம் சேர்ந்த போதும் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதைப் பொருத்து அவனுடைய நடத்தை, குணம் போன்றவற்றை கணக்கிட்டு விடலாம். மனிதனின் ஆளுமைக்கு இது ஒரு உரைகல்.

சான்றோர் துன்பத்திலும் இன்பத்திலும் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்து இயம்பும் பர்த்ருஹரி சுபாஷிதம் இது.

தன் செல்வத்தைப் பிறருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று விரும்பி,  அவர்களின் துயர் நீக்க முன்வருபவரே  சான்றோர். அத்தகைய மென்மையான இயல்பு கொண்டவர் தமக்கு ஏதாவது துன்பம் நேரும் போது துவண்டு விடாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வர். அப்படிப்பட்ட மகனீயர்களே உலகை உய்விக்க கூடியவர்.

மிருதுவான தாமரை, சேறில் இருந்து மேலெழுகிறது… மலர்கிறது… அனைவருக்கும் ஆனந்தத்தைப் பகிர்கிறது. தேன் வண்டுகளுக்கு அடைக்கலம் அளிக்கிறது… உணவளிக்கிறது.

எத்தகைய புயல் வீசினாலும் மலை  கலங்காமல் அசையாமல் நிற்கும். அதுபோன்றவர்கள் மகனீயர்கள். விடுதலைப் போரில் பங்கேற்ற பிரகாசம் பந்துலு போன்ற தலைவர்கள் இந்த சுலோகத்துக்கு உதாரணமாக  நின்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories