சுபாஷிதம்: பூவிதழ் போல் மென்மை… கல் போல் கடினம்!

subhashitam_1-5
subhashitam_1-5

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

95. பூவிதழ் போல் மென்மை… கல்போல் கடினம்!

ஸ்லோகம்:

சம்பத்சு மஹதாம் சித்தம் பவேதுத்பல கோமலம் !
ஆபத்சு ச மஹாசைல சிலாசங்காத கர்கசம் !!
– பர்த்ருஹரி (நீதி 56) 

பொருள்: 

பெருஞ்செல்வம் சேர்ந்த போது சான்றோர்கள் மனம் பூவிதழ் போல் மென்மையாக இருக்கும். (பிறர் துன்பம் கண்டு கருணையால் நெஞ்சில் ஈரம் கொண்டு உதவுவார்கள்). ஏதாவது ஆபத்து நேர்ந்தால் தைரியத்தோடு மலைபோல் திடமாக நின்று பொறுமையோடு அந்தத் துயரை தாங்கிக் கொள்வார்கள்.

விளக்கம்:

ஒரு மனிதன் துயர் வந்த போதும் செல்வம் சேர்ந்த போதும் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதைப் பொருத்து அவனுடைய நடத்தை, குணம் போன்றவற்றை கணக்கிட்டு விடலாம். மனிதனின் ஆளுமைக்கு இது ஒரு உரைகல்.

சான்றோர் துன்பத்திலும் இன்பத்திலும் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்து இயம்பும் பர்த்ருஹரி சுபாஷிதம் இது.

தன் செல்வத்தைப் பிறருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று விரும்பி,  அவர்களின் துயர் நீக்க முன்வருபவரே  சான்றோர். அத்தகைய மென்மையான இயல்பு கொண்டவர் தமக்கு ஏதாவது துன்பம் நேரும் போது துவண்டு விடாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வர். அப்படிப்பட்ட மகனீயர்களே உலகை உய்விக்க கூடியவர்.

மிருதுவான தாமரை, சேறில் இருந்து மேலெழுகிறது… மலர்கிறது… அனைவருக்கும் ஆனந்தத்தைப் பகிர்கிறது. தேன் வண்டுகளுக்கு அடைக்கலம் அளிக்கிறது… உணவளிக்கிறது.

எத்தகைய புயல் வீசினாலும் மலை  கலங்காமல் அசையாமல் நிற்கும். அதுபோன்றவர்கள் மகனீயர்கள். விடுதலைப் போரில் பங்கேற்ற பிரகாசம் பந்துலு போன்ற தலைவர்கள் இந்த சுலோகத்துக்கு உதாரணமாக  நின்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories