சுபாஷிதம்: நன்மை, தீமைகளின் சக்கரம்!

subhashitam_1-5-696x392-2
subhashitam_1-5-696×392-2

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

101. நன்மை,  தீமைகளின் சக்கரம்!

ஸ்லோகம்:

சுகஸ்யானந்தரம் து:கம் துக்கஸ்யானந்தரம் சுகம் !

ந நித்யம் லபதே து:கம் ந நித்யம் லபதே சுகம் !!

– மகாபாரதம்.

பொருள்:

இன்பத்தைத் தொடர்ந்து துன்பம் வருகிறது. துன்பத்திற்கு பின் இன்பம் கிடைக்கிறது. மனிதன் எப்போதும் இன்பமே பெறமாட்டான். எப்போதும் துன்பமே பெறமாட்டான்.

விளக்கம்:

காலம் ஒரு சக்கரம் போன்றது. ஒரு சமயம் கடுமையான வெய்யிலாக இருக்கும். பிறிதொரு சமயம் சூரிய தரிசனத்திற்காக ஏங்குவோம். வெயில் காலத்தில் அணியும் உடைகள் கூட பாரமாகத் தோன்றும். குளிர்காலத்தில் கம்பளி ஆடை அணிந்தால் கூட நடுங்கும். சிறிது மழையாவது தூறக் கூடாதா என்று ஏங்கும் காலமும் உண்டு.

அடை மழை நிற்காதா என்று புலம்பும் காலமும் உண்டு. இது இயற்கை நியதி. வாழ்க்கையில் நிகழும் இன்பங்களும் துன்பங்களும் இவ்வாறானவையே என்கிறார் வியாச பகவான் இந்த ஸ்லோகத்தில்.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

தீரன் எப்போதும் இன்ப துன்பங்களுக்கோ லாப நஷ்டங்களுக்கோ மகிழவோ  வருந்தவோ கூடாது என்ற உண்மையை மகாபாரதத்தில் உள்ள சாந்தி பர்வம் விளக்குகிறது. இந்த உண்மையை உணர்ந்தால் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை யாரும் எடுக்க மாட்டார்கள். வாழ்க்கை மீது ஒரு ஆசையை ஏற்படுத்தும் வாஸ்தவம் இந்த ஸ்லோகம்.

சக்கரத்தில் இருக்கும் ஆரங்கள் ஒருமுறை மேலும் ஒருமுறை கீழும் சுற்றிவரும். எப்போதும் எதுவும் ஒரே மாதிரி இருக்காது என்பது இயற்கை கற்பிக்கும் பாடம். சிறு துன்பம் நேர்ந்தாலே பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது அல்லது பிறரைக் கொலை செய்வது போன்ற வழக்கங்கள் சமுதாயத்தில் அதிகரித்து வருகின்றன. மகாபாரத கதைகளைப் படித்தால் தைரியமாக துன்பங்களை எதிர் கொள்ளும் சக்தி ஏற்படும்.

ராமன், தர்மபுத்திரன், ஹரிச்சந்திரன் போன்ற மகாராஜாக்கள் குடும்பத்தோடு நீண்ட காலம் துன்பம் அனுபவித்தாலும் தாங்கிக் கொண்டார்கள்.

இலைகள் உதிர்ந்து மொட்டையான மரம் மீண்டும் துளிர்க்கிறது. அதேபோல் துன்பம் நிலையாக இருக்காது. இன்பம் என்னும் தளிர் துளிர்க்கும். நாம் செய்யக்கூடியது நம்பிக்கையோடு எதிர்பார்த்திருப்பதே!

ALSO READ:  மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories