ஆடி ஸ்பெஷல்… நச்சுனு நாலு ரெசிப்பி..!

cooking samayal - 2026

அப்பம்

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் – முக்கால் கப், துருவிய தேங்காய் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் தேங்காயையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். பிறகு, வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இந்த மாவைக் கரண்டியால் எடுத்து கொஞ்சம் ஊற்றி, ஒருபக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பிப்போட்டு வெந்தவுடன் எண்ணெயை வடியவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: ஆவணி அவிட்டத்துக்கு இந்த அப்பம் செய்து படைப்பது வழக்கம்.

கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல்

தேவையானவை: கடலைப்பருப்பு – ஒரு கப், துருவிய தேங்காய் – கால் கப், துருவிய வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கடலைப்பருப்பை குழையாமல் வேகவைத்துக் கொள்ளவும். வெந்த பருப்பில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு சூடாக இருக்கும்போதே துருவிய வெல்லம், துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல் தயார்.

குறிப்பு: கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர் ஜெயந்தி அன்று இந்தச் சுண்டலைச் செய்து ஹயக்ரீவருக்குப் படைத்து, குழந்தைகளுக்கு அதைக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு படிப்பார்கள்.

வெள்ளிப்பிள்ளையார் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – 6 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் – ஒன்றரை கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து ரவை பதத்துக்கு உடைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 2 கப் நீர்விட்டு ஒரு கொதி விடவும். பின்னர் இறக்கி கல், மணல் போக வடிகட்டி மீண்டும் அடுப்பிலேற்றி தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து உடைத்த ரவையைச் சேர்க்கவும். பாதி வெந்ததும் இறக்கி கைகளில் நெய் தொட்டுக்கொண்டு உருண்டைகளாக உருட்டி இட்லித்தட்டில் வைத்து ஆவியில் 8 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: ஆடி மாதம் வெள்ளிக்கிழமையில் வெள்ளி முளைக்கும் அதிகாலையில் வெள்ளியில் செய்த பிள்ளையாரை வைத்து இந்தக் கொழுக்கட்டையும் செய்து படைப்பது குடும்பத்துக்கு மிகவும் நன்மை தரும்.

ஔவையார் நோன்புக் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி, அரிசியை உலர்த்தி, மிக்ஸியில் அரைக்கவும். 2 கப் நீர்விட்டு மாவை வேகவிடவும். வெந்ததும் கைகளால் பிடித்துக் கொழுக்கட்டைகளாகச் செய்து இட்லித்தட்டில் வாழை இலையில் எண்ணெய் தடவி வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை இரவில் இந்தக் கொழுக்கட்டை செய்து படைப்பர். இதை ஆண்கள் பார்க்கவும் கூடாது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories