ஆடி ஸ்பெஷல்… நச்சுனு நாலு ரெசிப்பி..!

cooking samayal - 2026

அப்பம்

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் – முக்கால் கப், துருவிய தேங்காய் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் தேங்காயையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். பிறகு, வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இந்த மாவைக் கரண்டியால் எடுத்து கொஞ்சம் ஊற்றி, ஒருபக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பிப்போட்டு வெந்தவுடன் எண்ணெயை வடியவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: ஆவணி அவிட்டத்துக்கு இந்த அப்பம் செய்து படைப்பது வழக்கம்.

கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல்

தேவையானவை: கடலைப்பருப்பு – ஒரு கப், துருவிய தேங்காய் – கால் கப், துருவிய வெல்லம் – அரை கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கடலைப்பருப்பை குழையாமல் வேகவைத்துக் கொள்ளவும். வெந்த பருப்பில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு சூடாக இருக்கும்போதே துருவிய வெல்லம், துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல் தயார்.

குறிப்பு: கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர் ஜெயந்தி அன்று இந்தச் சுண்டலைச் செய்து ஹயக்ரீவருக்குப் படைத்து, குழந்தைகளுக்கு அதைக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு படிப்பார்கள்.

வெள்ளிப்பிள்ளையார் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – 6 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் – ஒன்றரை கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து ரவை பதத்துக்கு உடைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 2 கப் நீர்விட்டு ஒரு கொதி விடவும். பின்னர் இறக்கி கல், மணல் போக வடிகட்டி மீண்டும் அடுப்பிலேற்றி தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து உடைத்த ரவையைச் சேர்க்கவும். பாதி வெந்ததும் இறக்கி கைகளில் நெய் தொட்டுக்கொண்டு உருண்டைகளாக உருட்டி இட்லித்தட்டில் வைத்து ஆவியில் 8 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: ஆடி மாதம் வெள்ளிக்கிழமையில் வெள்ளி முளைக்கும் அதிகாலையில் வெள்ளியில் செய்த பிள்ளையாரை வைத்து இந்தக் கொழுக்கட்டையும் செய்து படைப்பது குடும்பத்துக்கு மிகவும் நன்மை தரும்.

ஔவையார் நோன்புக் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி, அரிசியை உலர்த்தி, மிக்ஸியில் அரைக்கவும். 2 கப் நீர்விட்டு மாவை வேகவிடவும். வெந்ததும் கைகளால் பிடித்துக் கொழுக்கட்டைகளாகச் செய்து இட்லித்தட்டில் வாழை இலையில் எண்ணெய் தடவி வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை இரவில் இந்தக் கொழுக்கட்டை செய்து படைப்பர். இதை ஆண்கள் பார்க்கவும் கூடாது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories