மூணாறில் குளிரை அனுபவிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்

20221228 070110 - 2026

கேரள மாநிலம் மூணாறில் கடந்த ஒரு வாரமாக வெப்ப நிலை மைனஸ் டிகிரி செல்சியஸ் வரை குறைந்து கடும் குளிர் நிலவுவதால் அதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில் தொடர் உறைபனியால் தேயிலைச் செடிகள் கருகி வருகின்றன.

மூணாறில் ஜன.9 முதல் இன்று வரை காலையில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் ஒன்று முதல் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. குறிப்பாக கன்னிமலை, தேவிகுளம், லாக்காடு, செண்டுவாரை, நல்லதண்ணி உள்பட பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் பாம்பாடும் சோலை தேசிய பூங்காவுக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஒரு வாரமாக வெப்ப நிலை வெகுவாக குறைந்து உறைபனி ஏற்பட்டது. அதனால் கடும் குளிர் நிலவியதால் காலையில் பொது மக்களின் அன்றாட பணிகள் முடங்கிய நிலையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

அதேசமயம் அதிகரித்த குளிரை அனுபவிக்க உறைபனி ஏற்பட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் படை எடுத்தனர். குறிப்பாக மூணாறு அருகில் உள்ள கன்னிமலை எஸ்டேட் பகுதியில் 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் பெரும் அளவில் குவிந்தனர். தற்போது உறைபனி இல்லை என்ற போதும் குளிரை குழந்தைகளுடன் அனுபவித்தனர்.

Tamil News large 3219123 - 2026

ஒருவாரமாக நிலவிய உறைபனியால் தேயிலைச் செடிகள் கருகி வருகின்றன. இரு தனியார் கம்பெனிகளுக்குச் சொந்தமான எஸ்டேட்டுகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் தேயிலைச் செடிகள் கருகின.லாக்காடு எஸ்டேட்டில் நேற்று வரை 62 ஏக்கர் தேயிலைச் செடிகள் கருகின. அதனால் பச்சை தேயிலை பறிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மூணாறு பகுதியில் கடந்த சிலநாட்களில் காலை வெப்பநிலை பூஜ்ஜியத்தைத் தொட்டது.இந்த குளிர்காலத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையாக இது பதிவாகியிருக்கிறது.

மூணாறு பகுதியில் குண்டுமலா மற்றும் தேவிகுளம் லக்கட் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை பூஜ்ஜியத்தைத் தொட்ட நிலையில், மலைமுகடுகளை வெண்பனி மூடியிருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.அதேவேளையில், மூணாறுக்கு அருகே வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அளவாகவும், செந்துவரை உள்ளிட்ட இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories