தேவகுருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். தன்னலம் இல்லாதவர்கள், தலைவனாகும் தகுதி உள்ளவர்கள். உங்களுக்கு உழைப்பது பிடிக்கும், ஊருக்கு உழைப்பது இன்னும் பிடிக்கும். மென்மையாளவர்கள், அதை விட முக்கியமாக உண்மையானவர்கள். நட்புக்கு முக்கியத்துவம் தருபவர்கள். கௌரவம் பார்ப்பவர்கள். அந்தஸ்து பார்க்காமல் பழகுவதில்லை. உங்களை விட உயர்ந்தவர்களை தேடிப்பிடித்து பழகுவது உங்களுக்கு பிடித்த விஷயம். உங்களைப் பொறுத்தவரை எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாதவர்கள். உங்களுக்கு சுயநலம் இருந்தாலும் பொதுநலம் அதிகம்.
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

