மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவையின் 13வது பாடலை இன்று நாம் காண இருக்கிறோம்.
மாணிக்கவாசகர் இந்த பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் என்று தொடங்கும் இந்தப் பாடலில் பெண்கள் நீராட சென்றிருக்கும் அந்த மலர்கள் நிறைந்த குவளையை உமையம்மையோடும் பரம்பொருளோடும் ஒப்பிட்டு மிக அழகாக அருளியுள்ளார்.