வேலைக்கார பெண்ணை நாயுடன் படுக்க வைத்தவரிடம் விசாரணை

Published:

அமெரிக்காவில், வேலைக்காரப் பெண்ணை நாய்களுடன் படுக்க வைத்து கொடுமைப் படுத்தியதாக வந்த புகாரை அடுத்து வீட்டு உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹிமன்ஸ் பாட்டியா என்பவர் அமெரிக்காவில் உள்ள ரோஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஐடி ஸ்டாப்பிங் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாகப் பணி புரிந்து வருகிறார். இவரது வீட்டில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் இவர் மீது, அமெரிக்க தொழிலாளர் நலத்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஹிமன்ஸ் பாட்டியா கூடுதல் நேரம் வேலை வாங்கியதாகவும், போதிய சம்பளம் கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அவரது வீட்டு நாய்களுடன் தன்னை படுக்கச் சொன்னார் என்றும் அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரை அடுத்து உயர் அதிகாரிகள் ஹிமன்ஸ் பாட்டியாவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img