December 5, 2025, 1:20 PM
26.9 C
Chennai

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை உறுதி செய்த இலங்கை கிரிக்கெட் அணி!

srilanka team 1 - 2025

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை உறுதி செய்தது இலங்கை கிரிக்கெட் அணி. பாகிஸ்தானுக்கு செல்லும் சுற்றுப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இலங்கை அணியைச் சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சிலர் இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

இதனால் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சென்று விளையாடுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தத் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று இலங்கை தரப்பிலிருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி வீரர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பாகிஸ்தான் தரப்பிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது இலங்கை அணி நிர்வாகம்! இதை அடுத்து பாகிஸ்தான் அளித்த உறுதிமொழியின் பேரிலேயே பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

srilanka team 1 - 2025

பாகிஸ்தான் – இலங்கை தொடர் உறுதி செய்யப்பட்டுள்ள போதும், அணியின் முன்னணி வீரர்களான மலிங்கா, மாத்யூஸ், திசரா பெரேரா உள்ளிட்ட வீரர்கள், ஏற்கெனவே கூறியிருந்தது போல, பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

முன்னதாக, பாகிஸ்தானில் சென்று விளையாடவுள்ள தொடரை இலங்கை கிரிக்கெட் அணியின் சில முன்னணி வீரர்கள் தவிர்த்ததன் பின்னணியில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக செய்தி வெளியானது . அதை இலங்கை அரசு மறுத்தது.

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த தகவலில், பாகிஸ்தான் செல்ல இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுப்பு தெரிவித்ததற்கு இந்தியாவின் தலையீடு உள்ளதாக வெளியாகியுள்ள தகவலில் உண்மை இல்லை.

2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியை இலக்கு வைத்து பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்த தீர்மானத்தை எட்டியது என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கிரிக்கெட் வீரர்களின் இந்தத் தீர்மானத்தை தாம் மதிப்பதாக கூறியுள்ள அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பும் வீரர்களை தேர்வு செய்து அனுப்பும் பணியில் ஈடுபடவுள்ளதாகவும், இலங்கையிடம் பலம் பொருந்திய அணி ஒன்று உள்ளதாகவும், பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் மண்ணில் வைத்து வீழ்த்தும் என்றும் ஹரின் பெர்ணான்டோ நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories