December 5, 2025, 4:46 PM
27.9 C
Chennai

சக மாணவியை அடித்து உதைத்த மாணவர்! காதல் மறுப்பு!

shadow - 2025

காதலை ஏற்காததால், தனது தோழியை வகுப்பறையில் வைத்து சரமாரியாகத் தாக்கிய விட்டு கல்லூரி மாணவர் தலைமறைவு.

கேரள மாநிலம் இடுக்கி அருகில் முரிக்கசேரியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்றாமாண்டு படித்து வந்த ஜித்து ஜான், உடன் படிக்கும் மாணவியுடன் நட்பாகப் பழகினார்.

நட்பு, நாளடைவில் ஜானுக்கு காதலாக மாறியது. தனது காதலை மாணவியிடம் தெரிவித்தார். ஆனால் மாணவி, அதனை நிராகரித்துள்ளார். எனக்கு உன் மீது காதல் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வெறுத்துப் போன ஜான், காதலை ஏற்கும்படி அவரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். மறுத்துவிட்டார் மாணவி. இதனால் கோபமடைந்த ஜான், தனது காதலை ஏற்காத மாணவியை தாக்க முடிவு செய்தார்.

கடந்த 18ஆம் தேதி, வகுப்பறைக்குள் ஜான் நுழைந்ததும் மற்ற மாணவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். மாணவிகள் மட்டும் இருந்துள்ளனர். வகுப்பறைக் கதவை, ஜானின் நண்பர் ஒருவர் பூட்டினார்.

பின் அந்த மாணவியை நோக்கிச் சென்ற ஜான், அவரை இழுத்து சரமாரியாகத் தாக்கினார். சரிந்து கீழே விழுந்த அவரை, பூட்ஸ் காலால் மிதித்தார்.இதை எதிர்பார்க்காத சக மாணவிகள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு கல்லூரி ஊழியர்களும் மற்ற மாணவர்களும் ஓடிவந்ததை அடுத்து தப்பியோடினார் ஜான்.

படுகாயமடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தாடையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தலை மற்றும் காதுகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி முரிக்கசேரி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து ஜித்து ஜானை தேடி வருகின்றனர்.இந்த சம்பவத்தை அடுத்து ஜானை கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது.காதலை ஏற்காத மாணவியை சக மாணவரே தாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories