உலகக் கோப்பை இறுதிப் போட்டியை வெல்வதற்கு இரண்டே இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் என்று ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் தனது சகாக்களுக்கு கூறியுள்ளார். இதனை அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். நாளைய போட்டி சிறப்பான போட்டியாக இருக்கும். இதில் சந்தேகம் இல்லை. ஆனால், அது அணி சார்ந்ததாக இருக்க வேண்டும். அதைத்தான் நானும் விரும்புகிறேன். இந்தப் போட்டி குறித்து அணி வீரர்களிடம் பேசினேன். அப்போது உணர்ச்சி வசப்பட வேண்டாம். திறமையுடன் விளையாட வேண்டும். இது இரண்டும் முக்கியமான போட்டி மற்றும் தொடரை வெல்வதற்கு முக்கியக் காரணிகளாக இருக்கும் என்று வலியுறுத்தினேன். ஆகவே, நாளைய போட்டியில் எந்த வித்தியாசமும் இருக்காது. மெல்போர்ன் மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவது ஒவ்வொரு வீரர்களுக்கும் அற்புதமான தருணம். எனக்கு இது கடைசி போட்டி என்பதால் இன்னும் சிறப்பானது என்றார் அவர்.
போட்டியை வெல்ல இரண்டில் கவனம் செலுத்துங்கள்: கிளார்க் அறிவுரை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari