என்ஆர்ஐ வீடுகளாக தேடித்தேடி திருடிய பெண்!

Published:

IMG 20191101 WA0003 - 2026

என்ஆர்ஐ வீடுகளாக தேடித்தேடி திருடும் திருடி. டெக்சாஸ் பெண்மணியின் விநோத திருட்டு.!

அமெரிக்காவின் NRI வீடுகளே குறியாகக் கொண்டு திருடி வந்த டெக்ஸாசை சேர்ந்த பெண்ணிற்கு உள்ளூர் மாவட்ட நீதிமன்றம் 37 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் ‘சாகா காஸ்ட்ரோ ‘ (44) என்ற பெண்மணி இன்னும் மூன்று பேரோடு சேர்ந்து ஒரு குழுவை ஏற்படுத்தி கொண்டாள்.

இந்த நால்வரும் சேர்ந்து 2011 முதல் 2014 வரை ஜார்ஜியா நியூயார்க் ஓஹியோ மிச்சிகன் டெக்சாஸ் நகரங்களில் என்ஆர்ஐ வீடுகளை மட்டுமே இலக்காகக் கொண்டு திருட்டு தொழில் செய்து வந்தனர். இந்தியர்களிடம்தான் தங்க நகைகள் அதிகம் இருக்கும் என்பது இவர்களின் நம்பிக்கை.

இந்த கேங்க் திருடுவதற்கு சில தினங்கள் முன்பே எந்த வீட்டில் திருட வேண்டும் என்று திட்டமிட்டு அந்த வீட்டை பரிசீலிப்பது வழக்கம் .

வீட்டில் எத்தனை பேர் உள்ளார்கள்? யார் யார் எப்போது வெளியில் செல்வார்கள்? எப்போது திரும்பி வருவார்கள்? போன்ற விஷயங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு பக்கா ப்ளான் செய்து திருடுவது அவர்கள் ஸ்பெஷாலிட்டி.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

முகத்திற்கு முகமூடி அணிந்து கையில் துப்பாக்கியோடு வீட்டில் உள்ளோரை பயமுறுத்தி திருடுவார்கள்.

சாகா காஸ்ட்ரோ தலைமை கண்காணிப்பில் திருட்டில் ஈடுபட்ட இந்த கும்பல் இறுதியில் பிடிபட்டது.

5 வார விசாரணைக்கு பின் கோர்ட்டில் அவள் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் நீதிமன்றம் 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img