கி.வீரமணியின் மலேசிய நிகழ்ச்சி ரத்து! சாதித்த ஹிந்து மன்றம்!

veeramani - 2026

மலேசியாவில் வரும் நவம்பர் 24 (ஞாயிற்றுக்கிழமை) திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி, மலேசிய இந்து அரசு சாரா அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது.

திக., நிறுவனர் ஈ.வே.ராமசாமி (ஈ.வி.ஆர்) யின் தமிழ் திரைப்படத்தை திரையிடுவது தொடர்பாக வீரமணி மலேசியா செல்லவிருந்தார். திரைப்படத்தின் திரையிடல் தொடர்பாக ஓர் அழைப்பிதழ், “பெரியார் ராமசாமியின் வருகை மற்றும் அதன் தாக்கம்” குறித்து, “பெரியார்” திரைப்பட திரையிடலுக்கு முன்பு கி.வீரமணி பேசுவார் என்று கூறப் பட்டிருந்தது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்தின் பகுதியாக இருக்கும் இந்தியா-மலேசியா பாரம்பரியக் குழு மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையம் ஆகியவற்றின் உதவியில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் இந்திய நாடு குறித்தும் கேவலமாகவும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசி வரும் வீரமணி போன்ற விஷமப் பிரசாரகர்கள் பேசுவதற்கு மலேசியா இந்துதர்ம மாமன்றம் (மலேசியா இந்து தர்ம மன்றம்) மற்றும் சில அமைப்புகள் வீரமணியை மலேசியாவுக்கு வர தடை விதிக்குமாறு மலேசிய உள்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தன.

திராவிடர் கழக தலைவரின் வருகையை கண்டித்தும், பல இன மற்றும் பல கலாச்சாரம் கொண்ட நாட்டின் மத மரபுகள் மற்றும் நடைமுறைகள், வீரமணி வருகையால் பாதிக்கப் படவில்லை என்பதை மலேசிய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது இந்து தர்ம மன்றம்.

குறிப்பாக, மன்றம் அவரது நேர்காணலின் வீடியோ கிளிப்பை சுட்டிக்காட்டியது, அதில் அவர் கடவுளை வணங்குபவர்களை – எல்லா மதங்களையும் சேர்ந்தவர்களை- “முட்டாள்கள்” என்றழைத்தார். இவ்வாறு கடவுள் நம்பிக்கையாளரை முட்டாள்கள் என்று விளிப்பதை ஓர் இறை கொள்கை மற்றும் கடவுள் நம்பிக்கை கொண்ட இஸ்லாமிய நாடான மலேசியா ஏற்றுக்கொள்கிறதா என்றும் இந்து மன்றம் கேட்டிருந்தது

மலேசிய இந்து தர்ம மாமன்றம், கடவுளை நம்புங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தினரிடையே ஒரு முழுமையான ஒற்றுமையை அடைவதில் நம்பிக்கை அவசியம் என்பதை வலியுறுத்தியது.

மலேசியாவில், இந்திய தூதரகத்தின் சார்பில் , கலாச்சார மையம் இந்து கடவுள்களையும் இந்துக்களையும் கேலி செய்வதற்கும் மனரீதியாக துன்புறுத்துவதற்குமான வாய்ப்பை, முற்றிலும் மறுக்காமல், கி வீரமணி என்ற நபரின் பின்னணியை அறிந்தும் இத்தகைய ஒரு நபர் இந்த நிகழ்வுக்கு அழைக்கப் பட்டதில் சமூக ஊடகங்கள் ஆத்திரமடைந்தன. மலேசிய தூதரக அதிகாரிகள் பின்னணி குறித்த தங்கள் சந்தேகத்தை பலமாக எழுப்பினர்

ஒசாமா பின்லேடனைக் கொண்டாடும் அமெரிக்க தூதரகங்கள் போலவே இந்திய ஹை கமிஷனின் செயல்பாடும் கேலிக்குரியது என்று ஓர் அறக்கட்டளையின் நிறுவுனர் ராஜீவ் மல்ஹோத்ரா ட்வீட் செய்துள்ளார்.

கி.வீரமணியின் திட்டமிடப்பட்ட வருகை மலேசிய தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது, அவர் “உடைக்கும் இந்தியா படைகளின்” ஒரு பகுதியாக கருதப்படுவதால் அவரது வருகைக்கு எதிரானவர்கள் அணிதிரண்டனர்.

இந்த நிகழ்வில் இந்திய தூதரகம் ஏன் முதன்முதலில் ஈடுபட்டது என்று மலேசிய தமிழர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்!

மலேசியாவில் திராவிட சித்தாந்தங்களை தாங்கள் நிராகரித்ததாகக் கூறினர். வீரமணி தனது 2012 பயணத்தின் போது அந்த நாட்டில் ஏற்படுத்திய குழப்பத்திலிருந்து மலேசிய தமிழர்களுக்கு சங்கடம் தோன்றியது. ஈப்போவில் நடந்த ஒரு கூட்டத்தில், அவர் ஸ்ரீ கிருஷ்ணரை இழிவுபடுத்தியிருந்தார், அதன்பிறகு இந்து சங்கம் தனது கருத்துக்களைத் தெரிவித்து கண்டித்தது.

பெரும்பாலும் 2012 ல் கி.வீரமணியால் மலேசியாவில் என்ன நடந்தது என்பது குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எழுப்பிய கூச்சலும் கூக்குரலுமே, இப்போது கி.வீரமணி கலந்து கொள்ளவிருந்த நிகழ்வை ரத்து செய்ய காரணமாக அமைந்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

Topics

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories