டாக்கா வங்கதேசத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளை வலைதளத்தில் பதிவு செய்து வந்த வாஷிகுர் ரஹ்மான் மிஷுவை 3 பேர் கொண்ட கும்பல் திங்கள்கிழமை நேற்று வெட்டிக் கொன்றது. தலைநகர் டாக்காவிலுள்ள தேஜ்காவ்ன் தொழிற்சாலைப் பகுதியில், கசாப்புக் கத்திகளைக் கொண்டு பட்டப்பகலில் அம்மூவரும் ரஹ்மான் மிஷுவை வெட்டிக் கொன்றனர். மதக் கோட்பாடுகள் குறித்த மிஷு வெளியிட்ட கருத்துகளுக்காகவே இந்தப் படுகொலை நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் உடனடியாகக் கைது செய்தனர். மற்றொருவர் தப்பியோடிவிட்டார். வலைதளங்களில் கருத்துகளை பதிவு செய்ததற்காக வங்கதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட 3-ஆவது நபர் வாஷிகுர் ரஹ்மான் மிஷு. இதற்கு முன்னர் 2 ஆண்டுகளுக்கு முன் ரஜீப் ஹைதர் என்பவரையும், கடந்த மாதம் அவிஜித் ராய் என்பவரையும் வலைதளக் கருத்துப் பதிவுகளுக்காக மத அடிப்படைவாதிகள் படுகொலை செய்தனர். அந்த இரு கொலைகளிலும் “அன்ஸாருல்லா வங்காளம்’ என்ற அமைப்புக்குத் தொடர்பு இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு: வங்கதேச வலைப்பதிவர் வெட்டிக் கொலை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari