April 28, 2025, 5:01 AM
28.8 C
Chennai

கொரானாவால் போகாத உயிர் மருத்துவமனை பில்லை பார்த்த போயிடும் போல… ரூ 8.52 கோடி பில் பார்த்து அதிர்ந்த முதியவர்!

opretion

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவமனை சிகிச்சை கட்டணமாக சுமார் ரூ.8 கோடியே 52 லட்சம் பில் வந்துள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது.

அமெரிக்காவை கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது, மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அமெரிக்காவில் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு கொரோனாவை எதிர்த்து போராடி மீண்டு வந்தவருக்கு மருத்துவமனை சிகிச்சை கட்டணத்தை பார்த்த பிறகு தலை சுற்றி விட்டது என்றே சொல்லலாம்.

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் வசிக்கும் 70 வயதான முதியவர் ஒருவர் கடந்த மார்ச் 4ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மரணத்தின் விளிம்பிற்கு சென்ற அவர் சுமார் 62 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு மே 5ம் தேதி கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவரது கையில் கொடுத்த 181 பக்க பில்லை பார்த்து திகைத்து நின்று விட்டார். ஏனென்றால் அதில் 11,22,501.04 டாலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடியே 52 லட்சம்) சிகிச்சை கட்டணமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கொரோனாவில் இருந்து மீண்டு வந்ததை கூட அவரால் கொண்டாட முடியவில்லை. இந்த கட்டணத்தை பார்த்து இதயமே நின்று விட்டதைப்போல் உணர்ந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். முதியோருக்கான அரசாங்க காப்பீட்டு திட்டமான மெடிக்கேர் திட்டத்தின் கீழ், அவர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:  நெல்லை மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் தேதி நீட்டிப்பு!

சுகாதார கட்டமைப்பு வலுவாக உள்ள அமெரிக்காவில், அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவது பேசுபொருளாக மாறியுள்ளது. கொரோனாவால் அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை சமாளிக்க மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

Entertainment News

Popular Categories