மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு: பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டறிக்கை வெளியீடு

வாஷிங்டன்:

அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெள்ளை மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது. டிரம்ப் தனது மனைவியுடன் மாளிகை வாசலுக்கு வந்தார். மோடியுடன் கைகுலுக்கி கட்டித் தழுவி அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார். அவர் (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.40 மணி) வெள்ளை மாளிகை சென்றடைந்த போது, அவருக்கு வெள்ளை மாளிகையில் சிகப்புக் கம்பள வரவேற்று அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப்பும், மெலனியாவும் சிவப்புக் கம்பள உபசரிப்போடு வெள்ளை மாளிகைக்குள் அழைத்துச் சென்றனர். அமெரிக்க அதிபராக டிரம்ப்பை பிரதமர் மோடி முதல் முறையாக சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் போது இரு தரப்பு தொழில் வளர்ச்சி, சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை வரவேற்ற டிரம்ப், மிகச் சிறந்த பிரதமரான மோடி அமெரிக்கா வந்திருப்பது நாட்டுக்கு பெருமை அளிக்கிறது என்றும், பொருளாதார ரீதியாக சிறப்பாக அவர் செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டினார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாக, இந்த வரவேற்பு எனக்கு அளித்த வரவேற்பு அல்ல, கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு அளிக்கப் பட்ட வரவேற்பு என்று கூறினார் மோடி.

தொடர்ந்து டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடிக்கு விருந்து அளித்தார். அப்போது இருவரும் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து தனியாக சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் வெள்ளை மாளிகையில் உள்ள அறையில் பின்னர் உரையாடிய போது, பிரதமர் மோடி குறித்து அதிபர் ட்ரம்ப், “மோடி ஒரு சிறந்த பிரதமர். அவரைப் பற்றி படித்தும், கேள்விப்பட்டும் நிறைய தெரிந்துகொண்டுள்ளேன். அவர் இந்தியாவைப் பொருளாதார ரீதியாக சிறப்பாக முன்னேற்றிக்கொண்டிருக்கிறார்” என்று கூறினார். இதையடுத்துப் பேசிய பிரதமர் மோடி, “ட்ரம்ப்பும், மெலனியாவும் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இந்த வரவேற்பானது இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பாகப் பார்க்கிறேன். இந்த சந்திப்பில் நான் பேச நிறைய இருக்கிறது. மேலும், அமெரிக்க அதிபர் இந்தியாவின் முன்னேற்றத்தின்மீது ஆர்வமாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இதன் பின்னர் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அந்தக் கூட்டறிக்கையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளும் வளர்ச்சியின் உந்துசக்தியாக திகழ்கின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து செயல்படும். இந்திய பசிபிக் பகுதியில் அமைதியை நிலை நாட்டுவதுதான் இருநாடுகளின் குறிக்கோள். ஆப்கானிஸ்தானில் அமைதி, வளர்ச்சியில் இருநாட்டின் பங்களிப்பு மேலும் வலுப்படும்.. என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருவரும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த போது, பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்தார். பொருளாதார ரீதியாக மோடி சிறப்பாக செயல்படுகிறார்; உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் அமெரிக்காவுக்கு வருகை தந்ததில் பெருமிதம் கொள்வதாக டிரம்ப் கூறினார்.

இதன் பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று நெதர்லாந்த் செல்கிறார் மோடி.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories