மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு: பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டறிக்கை வெளியீடு

வாஷிங்டன்:

அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெள்ளை மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது. டிரம்ப் தனது மனைவியுடன் மாளிகை வாசலுக்கு வந்தார். மோடியுடன் கைகுலுக்கி கட்டித் தழுவி அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார். அவர் (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.40 மணி) வெள்ளை மாளிகை சென்றடைந்த போது, அவருக்கு வெள்ளை மாளிகையில் சிகப்புக் கம்பள வரவேற்று அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப்பும், மெலனியாவும் சிவப்புக் கம்பள உபசரிப்போடு வெள்ளை மாளிகைக்குள் அழைத்துச் சென்றனர். அமெரிக்க அதிபராக டிரம்ப்பை பிரதமர் மோடி முதல் முறையாக சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் போது இரு தரப்பு தொழில் வளர்ச்சி, சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை வரவேற்ற டிரம்ப், மிகச் சிறந்த பிரதமரான மோடி அமெரிக்கா வந்திருப்பது நாட்டுக்கு பெருமை அளிக்கிறது என்றும், பொருளாதார ரீதியாக சிறப்பாக அவர் செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டினார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாக, இந்த வரவேற்பு எனக்கு அளித்த வரவேற்பு அல்ல, கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு அளிக்கப் பட்ட வரவேற்பு என்று கூறினார் மோடி.

தொடர்ந்து டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடிக்கு விருந்து அளித்தார். அப்போது இருவரும் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து தனியாக சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் வெள்ளை மாளிகையில் உள்ள அறையில் பின்னர் உரையாடிய போது, பிரதமர் மோடி குறித்து அதிபர் ட்ரம்ப், “மோடி ஒரு சிறந்த பிரதமர். அவரைப் பற்றி படித்தும், கேள்விப்பட்டும் நிறைய தெரிந்துகொண்டுள்ளேன். அவர் இந்தியாவைப் பொருளாதார ரீதியாக சிறப்பாக முன்னேற்றிக்கொண்டிருக்கிறார்” என்று கூறினார். இதையடுத்துப் பேசிய பிரதமர் மோடி, “ட்ரம்ப்பும், மெலனியாவும் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இந்த வரவேற்பானது இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பாகப் பார்க்கிறேன். இந்த சந்திப்பில் நான் பேச நிறைய இருக்கிறது. மேலும், அமெரிக்க அதிபர் இந்தியாவின் முன்னேற்றத்தின்மீது ஆர்வமாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

இதன் பின்னர் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அந்தக் கூட்டறிக்கையில், பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளும் வளர்ச்சியின் உந்துசக்தியாக திகழ்கின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து செயல்படும். இந்திய பசிபிக் பகுதியில் அமைதியை நிலை நாட்டுவதுதான் இருநாடுகளின் குறிக்கோள். ஆப்கானிஸ்தானில் அமைதி, வளர்ச்சியில் இருநாட்டின் பங்களிப்பு மேலும் வலுப்படும்.. என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருவரும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த போது, பிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்தார். பொருளாதார ரீதியாக மோடி சிறப்பாக செயல்படுகிறார்; உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் அமெரிக்காவுக்கு வருகை தந்ததில் பெருமிதம் கொள்வதாக டிரம்ப் கூறினார்.

இதன் பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று நெதர்லாந்த் செல்கிறார் மோடி.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories