கொரோனா: பார்ட்டியில் முதலில் தொற்று ஏற்படுபவருக்கு பரிசு! எங்க தெரியுமா?

corona party

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றை மாணவர்கள் மிகவும் அலட்சியமாக கையாள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாட்டு அரசுகள் மிகவும் தீவிரமாக முயற்சி செய்துகொண்டுவரும் நிலையில், அமெரிக்காவில் கொரோன நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.

உலகிலேயே அதிகம் பாதிப்படைந்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு திணறிவரும் நிலையில், Tuscaloosa நகரத்தில் உள்ள மாணவர்கள் சிலர் கொரோனா பார்ட்டியை ஒருங்கிணைத்து, அங்கே கொரோனா பாதிப்படைந்தவர்களை பங்கேற்கவைத்து வைரஸை பரப்புகின்றனர்.

மேலும், பார்ட்டியில் கலந்துகொண்டு முதலில் நோய்த்தொற்று ஏற்படும் நபர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பால் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் அந்த பார்ட்டிகளில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி அதிகாரி சோனியா மெக் என்பவர் கூறியதாவது, “மாணவர்கள் இதுபோன்ற பார்ட்டிகளில் ஈடுபடுவது கொரோனா தொற்று பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்விதமாக உள்ளது. முதலில் நோய்த்தொற்று ஏற்படுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்பது மிகவும் முட்டாள்த்தனமானது” என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்களால் நடத்தப்படும் கொரோனா பார்ட்டி குறித்து, அப்பகுதி காவலர்களிடம் இன்னும் யாரும் புகார் கொடுக்கவில்லை எனவும் அவர்கள் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பலகட்ட முயற்சிகளை மேற்கொள்ளும்போது அமெரிக்காவில் இதுபோன்று நிகழ்வது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories