சனா: ஏமன் தலைநகர் சனாவில் வெள்ளிக்கிழமை 2 மசூதிகளில் பயங்கரவாதிகள் நேற்று பகல் நடத்திய தாக்குதல்களில் 137 பேர் பலியாகி உள்ளனர். 357 பேர் காயம் அடைந்துள்ளன்ர். ஏமனில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்கு தலைநகர் சனாவை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அண்மையில் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் அங்கு ஷியா பிரிவு முஸ்லிம்களும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் அடிக்கடி வந்து தொழுகை நடத்திச் செல்கிற அல் பாதிர், அல் ஹாஸ்ஹ¨ஸ் மசூதிகளில் நேற்று பகலில் 4 தற்கொலை படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத் தாக்குதல்களில் 137 பேர் உடல் சிதறி பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல்களுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் தாங்கள்தான் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக கூறி உள்ளனர்.
ஏமன் மசூதிகளில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 137 பேர் பலி
Popular Categories


