துபாய்: உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின்போது, ரோஹித் சர்மாவுக்கு வீசப்பட்ட பந்தை நோபால் என்று அறிவித்ததால் எழுந்த சர்ச்சையின் ஒரு பகுதியாக, வங்கதேசத்தை சேர்ந்தவரும் ஐசிசி தலைவருமான முஸ்தபா கமால் விமர்சித்திருந்தார். இதற்கு ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. ரோகித் ஷர்மாவுக்கு நோ-பால் வீசப்பட்டதாக அம்பயர் அலீம்தார் அறிவித்ததை ஐசிசி தலைவர் விமர்சனம் செய்திருக்க கூடாது, இது துரதிருஷ்டவசமானது என்று ஐசிசி தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஐசிசி தலைமை செயல் அதிகாரி, டேவிட் ரிச்சட்ர்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடுவர் அலீம்தார் நோ-பால் என்று அறிவித்த அந்த குறிப்பிட்ட பந்தை, சிலர் நோ-பால் இல்லை என்கின்றனர். ஆனால், அதை ஆய்வு செய்து பார்த்தபோது, 50-50 வாய்ப்பு இருந்தது தெரியவந்தது. நோ-பால் என்றும் கூறலாம், அல்லது நல்லபால் என்றும் அதை கூற முடியும். எனவே இந்த விஷயத்தில் அலீம்தாரை விமர்சனம் செய்வது விரும்பத் தக்கது இல்லை. ஐசிசி தலைவர் முஸ்தபா கமால், ஐசிசி குறித்து கூறிய சர்ச்சைக்குறிய கருத்து தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். அம்பயர் எடுக்கும் முடிவே இறுதியானது. அதை அனைவரும் மதிக்க வேண்டும். உள்நோக்கத்துடன், ஐசிசி நடந்துகொள்வதாக முஸ்தபா கமால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை.
வங்கதேச முஸ்தபா கமால் கருத்துக்கு ஐசிசி மறுப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

